செல்லம்.....செல்லம்
அம்மா போனில்
சொன்னது:
"பஸ்ஸில் நசுங்கி
நாய் செத்துப் போச்சு"
மனிதனே
மரணிக்க
நாயென்ன?
பாசம்
கொஞ்சலைத்
தவிர்த்து விட
நினைக்கும் போது
வினாவொன்று
தொக்கி நிற்கிறது.
அடிபட்டு
உயிர்த்திருந்த
அரை நிமிடம்
காலைச்
சுற்றி வந்த
அப்பா முகம்
அடித்தாலும்
சோறு போட்டுவிடும்
அம்மா
வறண்டு விட்ட
நாவில் யாரும்
ஊற்றாத
தண்ணீர்
எதை
நினைத்திருக்கும்?
2 எதிர் சப்தங்கள்:
இறந்துபோன எனது செல்லக்குட்டியின்
நினைவலைகளை ஒருமுறை மீட்டிச் சென்றது இந்த கவிதை!
நெஞ்சம் கணத்தது நண்பரே.
really good.. I have no words...
Post a Comment