இந்த ஆண்டு ஊர்வலத்தை பார்க்க மழை விடவில்லை என்றாலும், மதிய நேரத்தில் ஆயிரக்கணக்கான சிலைகளைக் கரைக்கும் 'டேன்க் பண்ட்' ஏரிக்கரையில் சுற்றித்திரிந்தேன். ஹைதராபாத் உற்சாகத்தின் உச்சத்தில் மிதந்தது. முந்தையநாளில் இந்தியா உலகக்கோப்பையில் வென்றிருந்தது, 'தேசபக்தி' வெள்ளத்தை ஓட விட்டிருந்தது.
'ஜெய் போலோ...கணேஷ் மகராஜ்க்கி...ஜெய்' என்ற கோஷத்தோடு 'பாரத் மாதாக்கி...ஜெ' என்ற கோஷமும் சேர்ந்திருந்தது. காவிக் கொடிகளோடு மூன்று வண்ணக் கொடிகளை பிடித்து கொண்டு கோஷம் எழுப்பினார்கள்.
கீழே இருக்கும் விநாயகர் சிலை, இந்தியாவின் மிகப்பெரிய விநாயகர் சிலை. (42 அடி உயரம். இது கைரதாபாத் என்னுமிடத்தில் வைக்கப்பட்டிருந்தது)
சார்மினார், பழைய நகரம் போன்ற இடங்களில் இசுலாமியர்கள் 'கார்பெட்' விரித்து விநாயகரை வரவேற்றார்கள். இது நல்லிணக்கத்தின் அடையாளமாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது
உற்சாகப் பெருக்கின் முடிவில் விநாயகர்கள் தண்ணீருக்குள் சோகமாக விழுந்து கிடந்தார்கள். பத்துநாள் உற்சாகத்தின் முடிவான ஊர்வலத்தின் அடுத்த நாள், சிலைகள் செய்யப் பயன்படுத்தப்பட்ட கம்பிகளை ஏரிகளில் இருந்து பொறுக்கிக் கொள்ளுபவர்கள் வரை ஆயிரக்கணக்கானோருக்கு விநாயகர் சதுர்த்தி சிறு சந்தோஷத்தையாவது கொடுக்கிறது.
ரம்ஜான் ஆகட்டும், கிறிஸ்துமஸ் ஆகட்டும் வேறு ஏதேனும் பண்டிகையாகட்டும், இந்த பண்பாட்டு ரீதியான உற்சாகம், ஆன்ம பலத்தை தருகிறது என்றே சொல்வேன்.
குருட்டாம்போக்கில் மதத்தோடு தொடர்புடைய நிகழ்வுகளையும் எதிர்க்கும் 'பகுத்தறிவு' பேசும் ஆட்கள் கிடக்கிறார்கள்.
குருட்டாம்போக்கில் மதத்தோடு தொடர்புடைய நிகழ்வுகளையும் எதிர்க்கும் 'பகுத்தறிவு' பேசும் ஆட்கள் கிடக்கிறார்கள்.
1 எதிர் சப்தங்கள்:
mani
the need for religion and god is more then .. the need to prove him or disprove him ..
faith and hope displayed in a group
is exciting and contagious at the same time ..
Post a Comment