நீ இல்லாத என் உலகத்தில் எதுவும் மாறப்போவதில்லை.
உனக்கான என் துக்கம்
ஏதாவது ஒரு நிலத்தில் அழலாம்
உனக்கான என் பிரியம்
என் விரல்களைப் பற்றி புலம்பலாம்
உன்னோடு பகிர்ந்து கொள்ள சேர்த்த சொற்களை
என்ன செய்வதென்று தெரியாமல் போகலாம்
உன் பதிலுக்கான என் கேள்விகள்
செல்வதற்கான இடம் தெரியாமல் திணறலாம்.
உன்னோடு பேசாத தினம் அழிந்து விடப்போவதில்லை.
என்றாலும்
நீ இல்லையென்ற வெறுமையை என்ன செயவதென்று யோசிக்கிறேன்.
Jun 2, 2007
Subscribe to:
Post Comments (Atom)
6 எதிர் சப்தங்கள்:
"உன்னோடு பகிர்ந்து கொள்ள சேர்த்த சொற்களை
என்ன செய்வதென்று தெரியாமல் போகலாம்
உன் பதிலுக்கான என் கேள்விகள்
செல்வதற்கான இடம் தெரியாமல் திணறலாம்."
அருமையான வரிகள்
//உன்னோடு பேசாத தினம் அழிந்து விடப்போவதில்லை.
என்றாலும்
நீ இல்லையென்ற வெறுமையை என்ன செயவதென்று யோசிக்கிறேன். //
மணிகண்டன் கை கொடுங்க. அருமையான வார்த்தைகள். கலக்கிட்டீங்க.
Hi Mani,
This is Shankar.
I liked this poem verymuch.
Good work
mani
fresh and subtle !
enjoyed it
கவிதை அற்புதம்.
கார்த்திக்.
Dear Manikandan,
Good,
Post a Comment