ஒவ்வொரு கணமும்
கனக்கிறது
* * *
உடைக்கவே முடியாத
மெளனம்.
மின்னல் முறிவது போல்
வந்து செல்லும்
முத்தத்தின் ஞாபகமிச்சங்கள்.
மடங்கிய காகித நுனிக்குள்
சிக்கியிருக்கும்
குங்குமத் துகள்.
*****
யாராலும் எழுதிவிட முடியாத
ஒரு கவிதை இன்னும் இருக்கிறது.
Apr 17, 2007
Subscribe to:
Post Comments (Atom)
7 எதிர் சப்தங்கள்:
//மடங்கிய காகித நுனிக்குள்
சிக்கியிருக்கும்
குங்குமத் துகள்.//
நல்ல வரிகள்
//யாராலும் எழுதிவிட முடியாத
ஒரு கவிதை இன்னும் இருக்கிறது.//
ரொம்ப நல்லாருக்கு.
\\யாராலும் எழுதிவிட முடியாத
ஒரு கவிதை இன்னும் இருக்கிறது\\
எல்லோராலும் எழுதப்பட்ட சொற்களைக் கொண்டமையக் காத்திருப்பதுதானே அதுவும். இந்தக் கவிதைக்கு எதிர்மறையான வரிகளைக் கொண்டமைந்த கல்யாண்ஜியின் கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது.
ரொம்ப நாள் கழித்து இனிமையான கவிதை.. உங்களிடமிருந்து..
யாராலும் எழுதிவிட முடியாத
ஒரு கவிதை இன்னும் இருக்கிறது
நெஜம் மணி :)
இனிமையான கவிதை..
ஆனந்தமாக இருக்கிறது படிக்க!
Post a Comment