Feb 5, 2009

நீங்கள் இறப்பதற்கான காரணங்கள்




அவ‌ள்
உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்
நீங்கள் பிரியத்தின் வெவ்வேறு வடிவங்களை உணர்த்திக் கொண்டிருக்கிறீர்கள்
அவ‌ள்
த‌ன் துக்க‌ங்க‌ளை ப‌கிர்ந்து
புதிர்க‌ளுக்கான‌ முடிச்சுக‌ளை காட்டுகிறாள்
நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்
அவளை அவளாகவே
உங்க‌ளை ஏற்றுக் கொள்ள‌ முடியாது என்கிறாள்
சிரிப்பதாக பாவித்த நீங்கள்
ஒரு பனிநனைத்த அதிகாலையில் 
அவ‌ளின் ப‌ட‌த்தை பார்த்து க‌த‌றிய‌ழுதீர்க‌ள்
பிற‌கு
த‌னித்த‌ ப‌ய‌ண‌த்தில்
சூரிய‌ன் முக‌த்தில் விழும் க‌ணத்தில் 
அழுது தீர்த்தீர்க‌ள்
நாட்க‌ள் க‌ழிய‌
உங்களை பிடிக்கும் என்கிறாள்
சொற்க‌ளை 
உங்க‌ளோடு புதைத்து 
கொஞ்சமாகச் சிரிக்கிறீர்க‌ள்
நேற்றுமில்லாத‌ இன்றுமில்லாத
த‌ருண‌த்தில்
உங்க‌ளின் அழ‌கின்மையை ப‌ட்டியலிட்டு
நீங்க‌ள்
க‌ட்டியிருந்த 
ஆளுமையை
சிதைக்கிறாள்
உங்களின் துக்கத்தை அறிந்தவளாய்
தான்
சொன்னவை எதுவும் பொருளற்றவை
த‌ன்
சிக்க‌ல்க‌ளின் வெற்று பிம்ப‌ங்கள் என்கிறாள்
நீங்க‌ள்
நிராக‌ரிக்க‌ எதுவுமில்லை
உண்மையின் வெம்மையில் க‌ச‌ங்க‌த் துவ‌ங்குகிறீர்க‌ள்
இந்த‌த் தார்ச்சாலையின் ம‌திய‌ வெயிலில்
வாகனத்தில் நசுங்குவது கூட
உங்களுக்கு
ஆசுவாசம் தரக்கூடும்
க‌ண்ணீரில் க‌ரைய‌த் துவ‌ங்கும்
உங்களைப் பார்த்து செருப்புத் தைப்ப‌வ‌ன்
வ‌ருத்த‌ப்பட்டிருக்கலாம்
உங்களுக்கு அடுத்தவரின் கருணை தேவையில்லை
உங்க‌ளின் துக்க‌ம் உங்க‌ளுக்கானது
இந்த‌க் க‌ண்ணீருக்கான‌ அர்த்த‌ம் முடிவ‌ற்றது
உற‌ங்க‌ச் செல்கிறீர்க‌ள்
இர‌வின் வெறுமை உங்க‌ளை விழிக்க‌ச் செய்கிறது.
அருகில் கிட‌க்கிற‌து ஒரு நைலான் க‌யிறு.

(த‌ற்கொலை செய்து கொண்ட‌ ந‌ண்ப‌ன் ம‌துவுக்கு)

2 எதிர் சப்தங்கள்:

ராஜா சந்திரசேகர் said...

மணி
இர‌வின் வெறுமை மதுவை என்னவெல்லாம் செய்திருக்கும்.
நைலான் கயிறு தற்கொலையின் பிம்பமாகி
கவிதையை மீண்டும் துவக்குகிறது.

ஆதவன் said...

ungal valaippoo miga arumai... neram irundhaal engal inayathalatthai paarthu ungal karuthai sollavum. ungal ezhutthugalum engal inayathalatthil idam petral magilvom.
parkka: www.thamizhstudio.com

nanri,
www.thamizhstudio.com