நட்சத்திரங்கள்
மழையாக உதிரும்
இந்நாளில்
உன் வருகையைக் கொண்டாடுகிறேன்.
இந்நகரின்
அடர் மலர்களிருந்து
உன் பாதைக்கான
நிறங்களை
முடிவு செய்கிறேன்.
முகம் தெரியா
பறவையின்
மென்னொலியில்
உனக்கான
பாடலை
இசைக்கச் செய்து
இன்று உலகிற்கு
அறிவிக்கிறேன் -
தீராப்பிரியங்களில்
உறைந்து கிடக்கும்
என்
தீராத சொற்கள்
உனக்கானவை
என.
2 எதிர் சப்தங்கள்:
மணிகண்டன்,
நிறைய நாட்களுக்குப்பின் உங்கள் கவிதை ! அழகு.
அனுஜன்யா
அழகான கவிதை!
Post a Comment