Aug 26, 2008

தீராப்பிரியங்களில்...



நட்சத்திரங்கள்
மழையாக உதிரும்
இந்நாளில்
உன் வருகையைக் கொண்டாடுகிறேன்.

இந்நகரின்
அடர் மலர்களிருந்து
உன் பாதைக்கான
நிறங்களை
முடிவு செய்கிறேன்.

முகம் தெரியா
பறவையின்
மென்னொலியில்
உனக்கான
பாடலை
இசைக்கச் செய்து

இன்று உலகிற்கு
அறிவிக்கிறேன்‍ -

தீராப்பிரியங்களில்
உறைந்து கிடக்கும்
என்
தீராத சொற்கள்
உனக்கானவை
என.

2 எதிர் சப்தங்கள்:

anujanya said...

மணிகண்டன்,

நிறைய நாட்களுக்குப்பின் உங்கள் கவிதை ! அழகு.

அனுஜன்யா

வானம்பாடி said...

அழகான கவிதை!