தனித்த இரவொன்றில் வேகுவதாகச் சொன்னேன்
உற்றுப் பார்த்தீர்கள்.
காரணம் தெரியாமல் கசங்குவதாகப் புலம்பினேன்
சிகரெட் பற்ற வைத்தீர்கள்.
வெறுமை கொடூரமானது என்றேன்
புகையினை அலாதியாக வெளியேற்றினீர்கள்.
வறண்ட கழிவறையில் அலையும் எறும்பு
நானென்றேன்.
சிரித்துக் கொண்டிருந்தீர்கள்-
தன் இரவினை
இலாவகமாக
கவ்வித் திரியும்
கரும்பூனையொன்றினை பார்த்துக் கொண்டே.
Dec 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 எதிர் சப்தங்கள்:
நல்லா இருக்கு கவிதை.
தனிமையும் - தன்னுள்ளே யோசிக்கும் மனமும் பதில்களுக்கு காத்திருப்பதில்லை ... நீண்ட இரவுகளும், விடிந்த பின்னரும் தொடரும் கனவுகளும் போல...
Post a Comment