Aug 24, 2006

வந்தே மாதரமும் வெங்காய சாம்பாரும்!!!

தாய்மண்ணே வணக்கம்ன்னு சொல்லுடான்னு சொன்னா கேட்க மாட்டீங்களா? என்ன தெனாவெட்டு உங்களுக்கு? இமாம் டெல்லியில குந்திகினு "முடியாது முடியாது"னு கூவிகினு இருந்தா நாங்க மூடிகிட்டு இருக்கணுமா? வாயை.

நான் சொல்லை ஐயா. நான் சொல்லை. ஓரிரு தினங்களுக்கு முன்னால் ஒரு தேசியத் தொலைக்காட்சியில் யாரோ கத்திக் கொண்டிருந்த மேட்டர்தான் அது.

பக்கிங்காம் சட்டர்ஜி இந்நேரம் கல்லறையில் இருந்து எழுந்து வந்து மீண்டும் தூக்கு போட எத்தனிப்பதாகக் கேள்வி. யோவ்..யாருய்யா சவுண்டு விடுறது? உங்க புள்ளாரும் (அதாம்பா விநாயகரு) துர்காவும் பால் குடிப்பாங்க. ஆனால் சட்டர்ஜி வரமாட்டாரா? நல்லா கீது பா உங்க டயலாக்கு.

ஒரு அரசாங்கம் பாடுன்னு சொல்லுது. நீங்கதான் பாடிடுங்களேன்னு கேட்டா அதெல்லாம் முடியாதுன்னு சொல்றான் இந்த சாதிக். அல்லாவைத் தவிர வேறெதுவும் கடவுள் இல்லை. அம்மா, அப்பா கூட அட அவ்வளவு ஏன் அந்த முகமது நபி கூட கடவுள் இல்லையாம். ஜனகண மண பாட மாட்டோம்னா கேளுடா அது தேசிய கீதம். தேசிய பாடல்ன்னா பாடுங்க. வேண்டாம்ன்னு சொல்லலை. எங்களை ஏண்டா நச்சுறீங்க? அப்படிங்குறான்.

அது சரி. அது அவன் நம்பிக்கை. ஏம்ப்பா ஜனநாயகவாதிகளே. எல்லோருக்கும் சுதந்திரம் இருக்குதுன்னு சொல்றீங்க. அப்புறம் என்னய்யா?

அதுக்குன்னு அப்புறம் எதுக்கு சட்ட திட்டம்ன்னு ஒண்ணு இருக்கு?புடிச்சா இங்க இரு. இல்லையா பக்கத்து நாட்டுக்கு மூட்டை கட்டு.

பார்றா......த்தூ நாயே......பாட்டு பாடிட்டு குண்டு வெச்சா தேசபக்தி பொங்குமா? நீயும்தான் பாட்டு பாடுற. நீ பண்றது எல்லாம் நாட்டுக்கு ஆவுற காரியமா? பாடிட்டு ஆகஸ்ட் 15ல நெஞ்சு மேல கொடியக் குத்தினா மட்டும்தான் தேசபக்தி, அவனுக்கு மட்டும்தான் இந்த நாடுன்னா.....ஙோ....இந்த நாட்டில பாதிக்கு மேல போலித்தனம் பேசுறவனாத் தாண்டா இருப்பீங்க.

துலுக்கன தூக்கி தலையில வெக்கிறதுக்குன்னே வந்துடுறானுக தூக்கி கட்டிட்டு...அப்படித்தானே முனவுற?

முனவு ராசா....முனவு.

காஷ்மீர்ல குண்டு வெச்சா இங்க நல்லகவுண்டபாளையத்து சையத் அலியக் கூட தீவிரவாதியாத்தானே பார்க்கிறோம்?எல்லாத் துலுக்கனுமா தீவிரவாதி? எல்லா இந்துவுமா தேசியவாதி?

நான் வர்றது இருக்கட்டும். நீங்களும் வர்றதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிங்க அப்பு. நீங்களே அவனுக மனசுல கொஞ்சம் கொஞ்சமா இந்த நாட்டுக்கும் அவனுக்கும் சம்பந்தமில்லைன்னு பேசுங்க. அப்புறமா அவன் பிரிவினை வாதம் பேசுறான்னு சொல்லுங்க.

எப்போ பேசினோம்னு கேட்குறீங்களா? திரும்பப் படிச்சுப் பாருங்க. இஷ்டம்னா இருன்னா என்ன அர்த்தம்? பொறப்புல இருந்து ரத்ததுல ஊறிக்கிடக்குறது மதம்தான் அய்யா. முதல்ல சாதி, அப்புறம் மதம், அப்புறம் மொழி, அப்புறம்தான் நாடு மனுஷன் எல்லாம். இல்லைன்னு சொல்லிட முடியுமா?

கவுண்டனும், ஐயரும் அடிப்பட்டு கிடந்தா(ஒரே அளவு) மூணாவதா இன்னொரு கவுண்டனுக்கு அந்த ரெண்டு பேரு சாதியும் தெரிஞ்சு, ஒருத்தனத்தான் காப்பாத்த முடியும்னா யாரைக் காப்பாத்துவான். கமுக்கமா சிரிக்காத. யோசிச்சு ஒழுங்காச் சொல்லு.

இங்க பாரு. சொன்னது சொல்லியாச்சு. நாங்க மதச்சார்பற்ற நாடுன்னு. அப்புறமென்ன? அவனவன் அவனுக்கு புடிச்ச மாதிரிதான் இருப்பான். முதல்ல குண்டு வைக்கறவன புடி. குண்டு வெடிச்சவுடனே துலுக்கன்தான் வெச்சான்னு அலறாத. அப்படியே அவன் வெச்சிருந்தாக் கூட இந்தியாவுல இருக்குற அத்தன முஸ்லீமும் சேர்ந்து வெச்சான்னு சொல்லாத. ஆச்சு பார்த்தயா?

வெறுப்பத் துப்புறது மட்டுமில்ல தேசபக்தி. நீ ஒழுங்கா இருந்து, அவன நசுக்காம இருந்தா உன்னை விட அவன் நாட்டுக்கு ரத்தம் அதிகமா கொடுப்பான். ஏதோ நாட்டுப்பற்றை மொத்தமா குத்தகைக்கு எடுத்துட்டு வந்த மாதிரி கூவாத. அப்படியே இருந்தாலும் அடக்கி வை. சத்தம் போட்டு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அதான் உண்மையான நாட்டுப் பற்று. நூறு கோடி பேரும் இந்தியன்னு நினைக்க வை. அவன் பிரிச்சுட்டு போறான்னா தொலையட்டும் சனியன்னு சேர்ந்து துரத்தாத. ஏன் போறான்னு யோசிச்சுப் பாரு. புரியுதா?

அடேசாமி.......மூச்சு விட முடியலை......கொஞ்சம் இந்த சரக்க இப்போதைக்கு நிறுத்துங்கைய்யா...காத்து வரட்டும்....அடேய் யாருப்பா அங்க? தண்ணி கொண்டு வாங்க.....கண்ணைக் கட்டுதுடா சாமீ.......

106 எதிர் சப்தங்கள்:

மனதின் ஓசை said...

"நச்" பதிவு.. ஆன செவிடன் காதுல ஊதின சங்காத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.

//வெறுப்பத் துப்புறது மட்டுமில்ல தேசபக்தி. நீ ஒழுங்கா இருந்து, அவன நசுக்காம இருந்தா உன்னை விட அவன் நாட்டுக்கு ரத்தம் அதிகமா கொடுப்பான். ஏதோ நாட்டுப்பற்றை மொத்தமா குத்தகைக்கு எடுத்துட்டு வந்த மாதிரி கூவாத. அப்படியே இருந்தாலும் அடக்கி வை. சத்தம் போட்டு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அதான் உண்மையான நாட்டுப் பற்று. நூறு கோடி பேரும் இந்தியன்னு நினைக்க வை. அவன் பிரிச்சுட்டு போறான்னா தொலையட்டும் சனியன்னு சேர்ந்து துரத்தாத. ஏன் போறான்னு யோசிச்சுப் பாரு. புரியுதா?//

சத்தியமான வார்த்தைகள்...

அருண்மொழி said...

எல்லாப் புகழும் துலுக்கனுக்கே. ஏ.ஆர்.ரஹ்மான் மட்டும் வந்தேஏஏஏஏஏஏஏஏஏஏ மாதரம் பாட்டுக்கு புது music போடவில்லை என்றால் நாட்டில் பாதி பேருக்கு அப்படி ஒரு பாட்டு இருப்பதே தெரியாது.

பொன்ஸ்~~Poorna said...

நட்சத்திரம், ஒரு முடிவோட இருக்கீங்க போலிருக்கு.. மின்னுங்க மின்னுங்க :)

Anonymous said...

Kalakkitta macchan... vakkira puncture-gal vunakku desa virodhi pattam kudukka ready-aa irukkuthu.. kavanamaa irunthu pozhacchukko raasaaa...

Anonymous said...

ArunMozhi,
Remember A.R.Rehman was a born Brahmin. Thats the reason why so called secular media celebrates him.

வஜ்ரா said...

//
பக்கிங்காம் சட்டர்ஜி
//

யோவ் நட்சத்திரம்...!! பன்கிம் சந்திர சட்டர்ஜி ய்யா அது..

//
முதல்ல குண்டு வைக்கறவன புடி. குண்டு வெடிச்சவுடனே துலுக்கன்தான் வெச்சான்னு அலறாத. அப்படியே அவன் வெச்சிருந்தாக் கூட இந்தியாவுல இருக்குற அத்தன முஸ்லீமும் சேர்ந்து வெச்சான்னு சொல்லாத. ஆச்சு பார்த்தயா?
//

ஙொக்கா மக்கா...

வந்தே மாதரத்துக்கு (ஏப்ப சாப்ப மேட்டர், ஆப்டரால் ரெண்டு வரி, சொன்னா அல்லா கோவிச்சுக்குவார்!! )

பத்துவா போட்ட மகராசன் தில்லி ஈமாம், குண்டு வச்ச கபோதியை முஸ்லீம் சமூகத்திலிருந்து விலக்கச் சொல்லி ஒரு பத்துவா போட வேண்டியது தானே...அத்தச் செஞ்சா ஏய்யா துலுக்கனுங்க பூரா தீவிர வியாதின்னு சொல்றோம்...?

SIMI, LeT, LeJ போன்ற அமைப்புகளை இஸ்லாமிய அமைப்பு அல்ல, அதற்கு ஆதரவு அளிப்பவர்கள் சமூகத்தைவிட்டு விலக்கி வைக்கப் படுகின்றனர் என்று பத்துவா போடு...!!?

அத்தச் செய்ய என்த துலுக்கனுக்குன் தைரியமில்லை. !!

துலுக்கனுக்கு தூக்கு புடிக்கிற ஐயா நீங்களே கேளுங்களேன் ?

Pot"tea" kadai said...

இது பதுவு...இஸ்டாரு பதுவு...என்னாடா சூட்டயே காணோமே எங்க குளிர் காயரதுன்னு பாத்தேன். ஒருவழியா கெடச்சிது.

ரெம்ப நன்னி.

ஒரைக்க வேண்டியவனுக்கு ஒரச்சிருந்தா காஷ்மீர்லருந்து கொமரி வர்லும் யான் அடிச்சிக்கிரானுவ.

nagoreismail said...

சபாஷ், நன்றிகள் பல, நல்ல நம் நாட்ட விட்டு எங்கப்பா ஓட சொல்றீங்க, நீங்க பிரியாணி சாப்பிடற் ஆளா இருந்தா கேட்டு தெரிஞ்சுகிட்டு ரம்ஜானுக்கு பிரியாணி செஞ்சு அனுப்பறேன். தீபாவளிக்கு 'இப்படி பண்ணிணது சாப்பிடறீங்களா'ன்னு கேட்டு எனக்கு பலகாரம் அனுப்புங்க. மதம் பாட்டுக்கு மதம் இருக்கட்டும். நாம் பாட்டுக்கு நாம் பக்கத்து வீட்டு காரங்க போல சந்தோஷமா இருப்போமே, என்ன சொல்றீங்க?

nagoreismail said...

துலுக்கன் என்ற வார்த்தையை நீக்கி விடும் படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி

லொடுக்கு said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!! யப்பா!!! என்ன ஒரு காரமான பதிவு!!! காட்டமான சொற்கள்..!! இப்படி கூட கருத்தை சொல்ல முடியுமா??? எனக்கென்னமோ குழு சேராத ஒரு நடுநிலைமாயன கருத்தா தான் தெரியுது!!!

அசுரன் said...

இந்த பதிவு போட்டதற்க்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..


நன்றி,
அசுரன்.

வஜ்ரா said...

..
ArunMozhi,
Remember A.R.Rehman was a born Brahmin. Thats the reason why so called secular media celebrates him.
..

A R Rehman was not a brahmin. He was a Mudaliyar Hindu before he converted to Islam.
I hope some day he will regret that and come back to Hindu fold as Dileep kumar S/O R.K Shekar.

Anonymous said...

//பத்துவா போட்ட மகராசன் தில்லி ஈமாம், குண்டு வச்ச கபோதியை முஸ்லீம் சமூகத்திலிருந்து விலக்கச் சொல்லி ஒரு பத்துவா போட வேண்டியது தானே...அத்தச் செஞ்சா ஏய்யா துலுக்கனுங்க பூரா தீவிர வியாதின்னு சொல்றோம்...? //

பத்துவா என்ன, நூறுவா போடுறேன்.. இந்தா வாங்கிக்கோ.. குண்டு வச்ச கபோதி முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவன் இல்லே x 100. போதுமா?
பெருசா வந்துட்டாரு ஆட்டிக்கிட்டு! பத்துவா போட்டது சட்ட விரோதம்னா அவரை புடிச்சு ஜெயில்ல போடு.. குண்டு வச்ச கபோதியை கண்டுபுடிச்சு என்ன வேணா பண்ணிக்கோ.. ஏன் எல்லா துலுக்கன் மேலயும் பாஞ்சு பிறாண்டுரே?

Vaa.Manikandan said...

அருண்மொழி,
அவர்களாக விருப்பப் பட்டால் வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்களாக ஏன் திணிக்கிறீர்கள் என்பதுதான் என் வினா.

வஜ்ரா,
ஆத்திரத்துல அண்டால கூட கைய விட முடியாது இல்லையா? அதாம்பா கனிபியூஜனு.
அமைதியா இருங்க வஜ்ரா. ரஹ்மான் சண்டைக்கு வரப் போறாரு. நீங்க சீரியஸ் ஆன ஆளுன்னு பார்த்தா செம காமெடி பண்ணுறீங்க. சத்யராஜ மீறின லொள்ளுங்க உங்களுக்கு. :)

ஒரு தனிப்பட்ட இயக்கம், மனிதனை வைத்து முழுச் சமூகத்தையும் வினாவுக்குள்ளாக்க வேண்டாம் என்பதுதான் கட்டுரையின் முழு நோக்கம் என்பதனைப் புரிந்து கொள்க.

Vaa.Manikandan said...

பாராட்டுத் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். அசுரன், இந்தியத் துலுக்கன், அனானிஸ் மற்றும் மனதின் ஓசைக்கும்.

பொட்டிக்கடைக்கும், பொன்ஸ்க்கும் நன்றிகள்.

நாகூர் இஸ்மாயில்,
எங்கள் ஊரில் , ஏன் நான் குறிப்பிட்ட அதே சாதிக்கை நான் துலுக்கன் என்று கூபிடுவேன். மற்ற கமாலுதீன், ஹாரூன் எனப் பலரையும். அது எங்கள் பகுதியில் தவறான விஷயமாகவே இல்லை. அந்தச் சொல் என் கோபத்தை வெளிப்படுத்த சரியானதாக இருக்கும் என்பதால் உபயோகப் படுத்தினேன். வேறு எண்ணமில்லை. மீண்டும் வற்புறுத்தினால் பரிசீலிக்கிறேன். ஆனால் கட்டுரையின் வலு குறையும் என்பது என் கருத்து.

வஜ்ரா said...

//
பத்துவா என்ன, நூறுவா போடுறேன்.. இந்தா வாங்கிக்கோ.. குண்டு வச்ச கபோதி முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவன் இல்லே x 100. போதுமா?
பெருசா வந்துட்டாரு ஆட்டிக்கிட்டு! பத்துவா போட்டது சட்ட விரோதம்னா அவரை புடிச்சு ஜெயில்ல போடு.. குண்டு வச்ச கபோதியை கண்டுபுடிச்சு என்ன வேணா பண்ணிக்கோ.. ஏன் எல்லா துலுக்கன் மேலயும் பாஞ்சு பிறாண்டுரே?
//

இந்தியத் துலுக்கன் என்று அனாமத்தாக அதர் ஆப்ஷன்ல வந்து சொல்லவேண்டிய அளவுக்குத் தான் அவர்கள் தைரியம்..!!

எந்த ஈமாம் Fatwa (பத்துவா) போட்டு இருக்கான்..சொல்லுங்கோ!!?

வந்தே மாதரம் எல்லாம் ஒரு மேட்டருன்னு பத்துவா போட்ட ஆளு, 200 பேர் செத்தாங்களே...அத்தப் பத்தி ஏதாச்சும் சொன்னாரா..? இல்லை!

இந்தியால செத்த 200 பேர் பத்திக் கவலைப் படாம லெபனான்ல இஸ்ரேல் குண்டு வீசுதுன்னு சொல்லி இஸ்ரேல் கொடியை மிதித்துப் போராட்டம் நடத்தினார். அதே ஈமாம்.

இஸ்லாம் என்னும் மார்க்கம் Nation/State என்ற கான்செப்டை மதிப்பது இல்லை. அதனாலேயே இப்படிப் பிரச்சனை வருகின்றது.

இடது சாரி சிந்தனையும் Natio/State கான்செப்ட்டை நம்புவது இல்லை. ஆகயால் அவர்கள் இஸ்லாத்தினை தீவிரமாக கடைபிடிப்பவர்களை ஆதரிக்கின்றனர்.

உண்மையாக இதனால் தேசபக்தனாக இருக்கும் இஸ்லாமியர் கூட இவர்கள் பேச்சைக் கேட்டு கெட்டுப் போக வாய்ப்புகள் உண்டு.

புலி வாலைப் பிடித்த நாயர் கதை தான் இடது சாரிகள் கதை. புலி எழுந்தவுடன் முதல் அடி Leftists க்குத்தான்.

Anonymous said...

//வந்தே மாதரத்துக்கு (ஏப்ப சாப்ப மேட்டர்//

ஏப்ப சாப்ப மேட்டருன்னு தெர்துல்லே. பின்ன எதுக்கு இத்தன ஆர்ப்பாட்டம். இச்டம் உண்டுன்னா சொல்றான். இல்லேன்னா போறான். விட்டு தள்ள வேண்டியது தானே.

//குண்டு வச்ச கபோதியை முஸ்லீம் சமூகத்திலிருந்து விலக்கச் சொல்லி ஒரு பத்துவா போட வேண்டியது தானே//

பாத்தியா. வச்சவன் எவனோ அவன திரும்பவும் ஒரு சமூகத்தோட தொடர்புபடுத்தற. ஏன் அவன் ஆர் எஸ் எஸ் காரனா இருக்கக்கூடாதா?

//SIMI, LeT, LeJ போன்ற அமைப்புகளை இஸ்லாமிய அமைப்பு அல்ல, அதற்கு ஆதரவு அளிப்பவர்கள் சமூகத்தைவிட்டு விலக்கி வைக்கப் படுகின்றனர் என்று பத்துவா போடு...!!?//

ஒரு பக்கம் மட்டுமே பேசுதியே. ஆர் எஸ் எஸ், பஜ்ரதங்கள், சிவசேனா, விச்வ கிந்து பரிசத் போன்றவ எல்லாம் என்ன சமூக பாதுகாவலர்களா?

அதயும் தட செய்யச் சொல்லி ஒரு பதிவு போடு பாப்போம். அப்ப ஒன் நேர்மய நம்பலாம்.

சும்மா வந்துட்டான் போவியா இழுத்து மூடீட்டு.

பீ.மு.க உறுப்பினர்

வஜ்ரா said...

..
சத்யராஜ மீறின லொள்ளுங்க உங்களுக்கு. :)
..

ஐயோ!! நான் ஜோக்கு தான் அடிச்சேன்...சத்தியமா!!

..
ஒரு தனிப்பட்ட இயக்கம், மனிதனை வைத்து முழுச் சமூகத்தையும் வினாவுக்குள்ளாக்க வேண்டாம் என்பதுதான் கட்டுரையின் முழு நோக்கம் என்பதனைப் புரிந்து கொள்க.
..

யாரும் அப்படிச் செய்வதில்லை.

இந்தியாவை இஸ்லாமிய நாடு ஆக்கவேண்டும் என்று Manifesto வைத்து குண்டு வைக்கும் தீவிரவாத இயக்கத்தை இஸ்லாமியர் எதிர்ப்பதில்லை. மாறாக ஆதரவு தெரிவிக்கின்றனர். அல்லது Thundering Silence என்று சொல்வார்களே அது தான் வெளிப்படுகின்றது.

ஒரு ஊரில் கொலைக்காரன் இருந்தால் அந்த ஊர் மக்களே அவனை போலீஸில் பிடித்துக் கொடுப்பது இஸ்லாமிய மக்களிடையே நடப்பது இல்லை. அது தான் காரணம் மொத்த சமூகத்தின் மேல் வெறுப்பு திரும்ப.

இஸ்லாத்தில் இருக்கும் தீவிரவாதிகள் தீவிரவாதத்தில் ஈடுபட இஸ்லாமே காரணம் என்கின்றனர். நல்லவர்கள் இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிப்பது அல்ல என்கின்றனர். ஆனால் குண்டு வெடிப்பு, தீ வைப்பு போன்ற காரியங்கள் அரங்கேறும் போது கப் சிப்! மூச்சு விடமாட்டார்கள்! எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் அப்படிச் செய்ய மனசு வரும்?

Anonymous said...

//புலி வாலைப் பிடித்த நாயர் கதை தான் இடது சாரிகள் கதை. புலி எழுந்தவுடன் முதல் அடி Leftists க்குத்தான்.//

அது எப்டிப்பா உன்னால மட்டும் இது முடியுது. சரியா புடிச்சிருக்கியே.

அப்படியே "ஹிந்துத்துவ அஜண்டாவோட" வரும் ஆர் எஸ் எஸ் எழுந்தா மொத அடி யாருக்குன்னும் சொல்லீரேன்.

ஏன் ஒன்னால முடியாதா? அதான் தெரிஞ்ச வெசயமாச்சே. அவிங்களுக்கு எதிரா வாயத் தொறந்தீன்னா கொழுத்திப்புட மாட்டாங்க.

செரி நானே சொல்லுரேன்.

"ஹிந்துத்துவ அஜண்டாவோட" வரும் ஆர் எஸ் எஸ் எழுந்தா மொத அடி முஸ்லிம்களுக்கு எதிரா மூளச்சலவ செய்து களமிறக்கும் தலித்துகளுக்கும், மலசாதி மக்களுக்கும் தாய்ங்.

பீ.மு.க உறுப்பினர்

கோபா said...

இந்த பதிவு போட்டதற்க்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..


நன்றி,
புதிய காற்று

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மணிவண்ணா!
காலத்துக் கேற்ற கருத்து.
யோகன் பாரிஸ்

Anonymous said...

வஜ்ரா பாபர் மசூதிய இடிச்சவங்கள நீங்க என்னைக்காவது தீவிரவாதின்னு சொல்லி இருக்கீங்களா?

Anonymous said...

சமீபத்திய லண்டன் கைதுகளுக்கு காரணமே ஒரு முஸ்லீம் அன்பர் கொடுத்த துப்புதான் என்று தகவல்கள் கூறுகின்றன.

இங்கு கண்மூடித்தனமாக முஸ்லீம்களை எதிர்ப்பவர் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.என்ன அது?

Anonymous said...

sonnenla.. correct-aa vakkiram vanthirum nu :)) eppadi thaan correct-aa varraaingalooooo...hayyo hayyo...

மலைநாடான் said...

முதலில் நட்சத்திர வாரத்திற்கான வாழ்த்துக்கள். இன்றுதான் வரமுடிந்தது. இந்தப்பதிவைத்தான் முதலில் வாசித்துள்ளேன். அருமையான பதிவு. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
நன்றி!

தி.ராஸ்கோலு said...

மணிகண்டன்

இந்தப் பதிவிட்டதற்காக என் நன்றியைப் பதிவு செய்ய இந்தப் பின்னூட்டம். மற்றபடி காவிக் கோமாளிகள் சாமியாடுவதைப் பார்க்க நல்ல காமெடியாக உள்ளது.

Anonymous said...

//இந்தியத் துலுக்கன் என்று அனாமத்தாக அதர் ஆப்ஷன்ல வந்து சொல்லவேண்டிய அளவுக்குத் தான் அவர்கள் தைரியம்..!! //

இஸ்டேண்டு ஃபார் இஸ்ரேலுன்னு அவன் பண்ற அத்தன அராஜகத்தையும் சப்பைக்கட்டு கட்டுற ஒரு கும்பலே இங்கே வெக்கப்படாம இருக்குறப்போ, 'இந்தியத் துலுக்கன்'னு சொல்லிக்கிறதுல எனக்கென்ன வெக்கம்!

//வந்தே மாதரம் எல்லாம் ஒரு மேட்டருன்னு பத்துவா போட்ட ஆளு, 200 பேர் செத்தாங்களே...அத்தப் பத்தி ஏதாச்சும் சொன்னாரா..? இல்லை..//

எல்லாத்துக்கும் அவரு வந்து பத்துவா கொடுக்கனும்னு ஏன்யா எதிர்பாக்குறீங்க? இதெல்லாம் ஏப்ப சாப்ப மேட்டர்னு வுட்டுத் தள்ளிட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதானே?

ஆப்கானிஸ்தான்லே ஒரு இந்தியன் செத்தப்போ, ஒரு துலுக்கன்தான்யா பதிவு போட்டாரு. ஒடனே, ஒருத்தர் ஓடி வந்து 'இது நீலிக் கண்ணீரு'ன்னு அருள்வாக்கு சொல்லிட்டு வீடு பத்திக்கிட்டு எரியுறப்போ பீடிக்கு நெருப்பு கிடைக்குமான்னு கேட்டுக்கிட்டு திரிஞ்சாரு. அந்த மாதிரி ஆளுங்கள போய் அடக்குங்கய்யா மொதல்ல..

வஜ்ரா said...

//
அப்படியே "ஹிந்துத்துவ அஜண்டாவோட" வரும் ஆர் எஸ் எஸ் எழுந்தா மொத அடி யாருக்குன்னும் சொல்லீரேன்.
//
காக்கி டவுசர் கெழடு கட்டைங்கல்லாம் ஒரு கேசா!? அவிங்க எந்திரிக்கிறதுக்கே கைத்தடி வேணும்...அவிங்க அடிக்கப் போறாங்களா? ஏய்யா ஜோக்கடிக்கிறீங்க...!

..
சமீபத்திய லண்டன் கைதுகளுக்கு காரணமே ஒரு முஸ்லீம் அன்பர் கொடுத்த துப்புதான் என்று தகவல்கள் கூறுகின்றன.
..

KK, (கேள்வி கேட்பவன் தான்!!)

இஸ்லாம் பெயரைச் சொல்லிக்கொண்டு தீவிரவாதம் செய்பவர்களைக் காட்டிக் கொடுக்கும் கட்டாயம் இஸ்லாத்தவருடயது. அவர்களை ஒதுக்கிவைக்க வேண்டிய கட்டாயமும் அவர்களுடயதே.

..
இங்கு கண்மூடித்தனமாக முஸ்லீம்களை எதிர்ப்பவர் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.என்ன அது?
..

கண்மூடித்தனமாக இஸ்லாத்தை எதிர்ப்பவர்களுக்குள் இஸ்லாத்தை எதிர்ப்பவர்கள் என்ற ஒற்றுமைத்தவிர வேறேதும் இல்லை.

கேள்வி கேட்பவன்னு சொல்லிட்டு கேணையாட்டம் கேள்வி கேட்றுக்க...!!?

..
வஜ்ரா பாபர் மசூதிய இடிச்சவங்கள நீங்க என்னைக்காவது தீவிரவாதின்னு சொல்லி இருக்கீங்களா?
..

பாகிஸ்தானுக்குப் போயி மேடை போட்டு அந்த அத்துவாணி சொல்லலியா?
(இவர்கள் தீவிரவாதிகள் என்றால் கோவில்களை இடித்த காட்டுமிராண்டிகளை என்னவென்று சொல்வது போங்க..? ஆரம்பிச்சவன் முடிக்காட்டி, இழுத்துகிட்டே போகும் புர்தா கண்ணா!)

..
எல்லாத்துக்கும் அவரு வந்து பத்துவா கொடுக்கனும்னு ஏன்யா எதிர்பாக்குறீங்க? இதெல்லாம் ஏப்ப சாப்ப மேட்டர்னு வுட்டுத் தள்ளிட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதானே?
..

இந்திய முஸ்லீம், (துலுக்கன்னா நல்லாவா இருக்கு!!?)

..
எல்லாத்துக்கும் அவரு வந்து பத்துவா கொடுக்கனும்னு ஏன்யா எதிர்பாக்குறீங்க? இதெல்லாம் ஏப்ப சாப்ப மேட்டர்னு வுட்டுத் தள்ளிட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதானே?
..

ஒரு ஏப்ப சாப்ப மேட்டருக்கெல்லாம் பத்துவா, நூறுவா, ஐனூறுவா போடுற ஆளு, ஆளு செத்ததுக்கு போடாட்டி என்னத்துக்குய்யா அந்தாள ஈமாமு-கீமாமுனுகிட்டு ? தூக்கி தூரபோடுய்யா அந்த மேட்டரையும் அந்தாள் பேச்சையும்!

உண்மையில சொல்லுங்க...

தாய் மண்ணே வணக்கம் (வந்தே மாதரம்) சொல்றனால தலை சுக்கு நூறாவா வெடிக்கப் போவுது..?

விக்கிரமாதித்தன் சொமந்த வேதாளத்தையா சொமந்துகிட்டு இருக்கீங்க? After all ஒரு மதம்...!!

Vaa.Manikandan said...

வஜ்ரா,
நிஜமாவா? வாவ். நல்ல ஜோக். நல்ல விவாதத்தை நகைச்சுவையுணர்வுடன் நகர்த்துவதற்கு நன்றி :).

இசுலாமியத் தீவிரவாதிகளின் அராஜகப் போக்கை இசுலாமியன் கேள்வி கேட்பதில்லை என்பது உங்கள் வாதம். அவ்வளவுதானே!.அதான் சொல்கிறேன். ஏன் எதிர்ப்பதில்லை. எதனால் பாதிக்கப்படுகிறான்? அதனை ஆராய்ந்தால் தீர்வு கிடைத்து விடப் போகிறது.

கருத்திட்டுக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு நன்றி.

Unknown said...

மிக நல்ல பதிவு.
வஜ்ரா என்ற பாப்பாரப்பயலுக்கு மட்டும் ஏன் கோபம் வருகிறது. சொன்ன பொய்யையே திரும்பத்திரும்பச் சொல்லி மெய்யாக்க நினைக்கும் பைத்தியம். இந்தியாவில் குண்டு வைத்தவனை எந்த இஸ்லாமியன் ஆதரித்தான். மற்றொருவன் அதே தவறைச் செய்ய பயங்கொள்ளுமளவுக்கு அவனுக்கு சரியான தண்டணை கொடு என்றுதான் கூறுகிறான்.
குண்டு வைச்ச கபோதியை ஏன் இஸ்லாத்தை விட்டு ஒதுக்க? அநியாயமாக அப்பாவிகளின் உயிரைக் குடித்ததற்காக உலகத்தை விட்டே அனுப்பு என்றல்லவா சொல்கிறோம்.
டெல்லி இமாம் என்ன இந்திய முஸ்லீம்களுக்கு அத்தாரிட்டியா? என்று இவர்களே கேட்பார்கள். சரியான கோண புத்தி மண்டூகம். அப்புறம் அதுக்கு ஆதாரமாக எவனொ ஒரு யூதன் எங்கேயோ எழுதியதை எடுத்துப் போட்டு படங்காட்டுவா...

Anonymous said...

யோவ் வஜ்ரா
உங்கள் இந்து வேற(இந்து) எவனாவது பேசுறானான்னு பாரு. அத்தினி பேருக்கும் தெரிஞ்சிருக்கு. இங்கிட்டு நியாயம் இருக்குன்னு. புலம்பிச் சாவாத.

Anonymous said...

//ஒரு ஏப்ப சாப்ப மேட்டருக்கெல்லாம் பத்துவா, நூறுவா, ஐனூறுவா போடுற ஆளு, ஆளு செத்ததுக்கு போடாட்டி என்னத்துக்குய்யா அந்தாள ஈமாமு-கீமாமுனுகிட்டு ? தூக்கி தூரபோடுய்யா அந்த மேட்டரையும் அந்தாள் பேச்சையும்!//

அதத்தானய்யா நானும் சொல்றேன். தூக்கி தூரபோடுய்யா அந்த மேட்டரையும் அந்தாள் பேச்சையும்! முஸ்லிம்களுக்கு யாரு சொன்னாங்கன்றது முக்கியம் இல்லே. என்னா மேட்டரு சொன்னாங்கன்றதுதான் முக்கியம். சரியா?

வஜ்ரா said...

நன்றி மணிகண்டன்,

என் கருத்து உங்களுக்குச் சென்றடைந்துவிட்டது...மற்றவர் பற்றி எனக்கு கவலை இல்லை.

podakkudian said...

அருமையான பதிவு வாழ்த்துக்கள். தொடர்ந்து இது போல் பதிவுகள் வர வேண்டும்.

பொன்ஸ்~~Poorna said...

//வந்தே மாதரமும் வெங்காய சாம்பாரும்!!!
//
மணி, இந்தக் கட்டுரையில் வெங்காய சாம்பார் பற்றி ஏதும் சொல்லாததைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.. :)

Anonymous said...

வா மணிகண்டன் சாரே, நீங்க இப்படி சொன்னா...

//ஏன் எதிர்ப்பதில்லை. எதனால் பாதிக்கப்படுகிறான்? அதனை ஆராய்ந்தால் தீர்வு கிடைத்து விடப் போகிறது.//

நம்ம வச்சுத்தா எப்படி ஜகா வாங்குதுன்னு பாரு..

//என் கருத்து உங்களுக்குச் சென்றடைந்துவிட்டது...மற்றவர் பற்றி எனக்கு கவலை இல்லை.//

மூக்கு ஒடப்படப்போவுத்துன்னு தெரிஞ்சவுடனே வசம்மா கழண்டுக்குது நொள்ளகண்ணு.

////ஒரு ஏப்ப சாப்ப மேட்டருக்கெல்லாம் பத்துவா, நூறுவா, ஐனூறுவா போடுற ஆளு, ஆளு செத்ததுக்கு போடாட்டி என்னத்துக்குய்யா அந்தாள ஈமாமு-கீமாமுனுகிட்டு ? தூக்கி தூரபோடுய்யா அந்த மேட்டரையும் அந்தாள் பேச்சையும்!//

அதத்தானய்யா நானும் சொல்றேன். தூக்கி தூரபோடுய்யா அந்த மேட்டரையும் அந்தாள் பேச்சையும்! முஸ்லிம்களுக்கு யாரு சொன்னாங்கன்றது முக்கியம் இல்லே. என்னா மேட்டரு சொன்னாங்கன்றதுதான் முக்கியம். சரியா?//

வச்சுத்தாவின் மண்டைல இது ஏறும்ன்னுறீங்க. எங்க?

என்னதான் சொன்னாலும் "அல்லா" முஸ்லிமும் தீவிரவாதிதானுங்கோ.

இஸ்டேண்டு ஃபாரு இஸ்ரேலுன்னு சொல்லுறவன்லாம் யோக்கியனுங்கோ. சொம்ப எடுத்து உள்ள வையுங்கோ.

Chellamuthu Kuppusamy said...

//மணி, இந்தக் கட்டுரையில் வெங்காய சாம்பார் பற்றி ஏதும் சொல்லாததைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.. :)//

Me too...

CAPitalZ said...

///நீங்களே அவனுக மனசுல கொஞ்சம் கொஞ்சமா இந்த நாட்டுக்கும் அவனுக்கும் சம்பந்தமில்லைன்னு பேசுங்க. அப்புறமா அவன் பிரிவினை வாதம் பேசுறான்னு சொல்லுங்க.///

உண்மையாக கருத்து. ஆனால், இதை அப்படியே மாத்தி அவர்களிடமும் கேட்கலாம். அதாவது, குண்டுவைச்சவன் முஸ்லிம் இன்னா, அவன் நாட்டின் துரோகி எண்டு மட்டும் பாருங்க. அது முஸ்லிம்களுக்கு எதிரான இந்துக்களின் சதி எண்டு புரளிய கிளப்பி விட்டு ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் திசைதிருப்பக் கூடாது தானே.

Vaa.Manikandan said...

வஜ்ரா சங்கர் அவர்கள் விலகிச் செல்வது போல் தோன்றினாலும் நானே வலியச் சென்று என் பதிவில் நடைபெறும் விவாதத்திற்குள் உள் இழுப்பது நன்றாக இருக்காது.( இது கூட தவிர்க்கப் பட்டிருக்கலாம். நீங்கள் சுட்டிக் காட்டியதால் குறிப்பிடுகிறேன்).

வெங்காயச் சாம்பார் என்பது ஒரு படிமம். அவ்வளவே. எளிதில் புரிந்து கொள்ளப்படக்கூடிய ஒன்று.

Thekkikattan|தெகா said...

மணி,

அருமையான, இந்த காலக் கட்டத்திற்கு தேவையான ஒரு பதிவு, நன்றி!

நக்கீரன் நல்ல ஆழமான அலசல்...

Muse (# 01429798200730556938) said...

இந்தப் பாடலை பாட இஸ்லாமியர் தயங்குவதில் அவர்கள் மத

அடிப்படையிலான காரணங்கள் உண்டு. அல்லாவைத்தவிர மற்றவர்களை,

மற்றவற்றை வணங்கக்கூடாது என்பது அவர்களுக்கு குரான் சொல்லும்

பாடம்.

வந்தே மாதரம் பாடல் முழுக்க முழுக்க (முதல் இரு பாராக்களைத்

தவிர்த்து) ஹிந்து தத்துவங்கள் நிறைந்த ஒரு பாடல். என் உடலுக்குள்

இருக்கும் உயிர் நீயே, எல்லா கோயில்களிலும் இருப்பவள் நீயே என்பது

போன்ற வரிகள்.

இதை ஆரம்பத்திலேயே இஸ்லாமியர் எதிர்த்ததால் பிரச்சினைகள்

எதுவுமில்லாத முதல் இரு பாராக்களை மட்டும் பாடுவது என்று முடிவு

செய்தார்கள். எல்லா இடங்களிலும் பொதுப்படையான வாழ்த்தான அந்த

முதல் இரண்டு பாராக்கள்தான் பாடப்படுகின்றன. தமிழ்தாய்

வாழ்த்துபோல, அது ஒரு நாடுபற்றிய் உயர்வாய் பாடுகின்ற பாடல். ஜன

கன மன தேஸிய கீதம். பாடப்படும் நேரங்கள் வேறு.

இப்போது இமாம் முதலானவர்கள் ஃபத்வா விதித்திருப்பது அந்த இரண்டு

பாராக்கள்கூட பாடப்படக்கூடாது என்பதற்குத்தான். அதாவது பாடப்படுகின்ற

பொதுப்படையான கருத்துக்களைக்கொண்ட வரிகளைக்கூட பாடக்கூடாது

என்பதுதான் அந்த ஃபத்வா.

இப்படித்தான் நான் இதை புரிந்துள்ளேன். தவறுகள் இருந்தால்

திருத்திக்கொள்வேன். தயவுசெய்து சுட்டிக்காட்டவும்.

Anonymous said...

//நன்றி மணிகண்டன்,

என் கருத்து உங்களுக்குச் சென்றடைந்துவிட்டது...மற்றவர் பற்றி எனக்கு கவலை இல்லை.

பேசியவர் வஜ்ரா ஷங்கர், அட் 5:11 PM //

-வஜ்ரா, மணிகண்டனுடைய பதிவில் வந்தும் உங்கள் கருத்தைப் பற்றித்தான் கவலைப்படுகிறீர்களே தவிர, அவருடைய அரிய கருத்தை உங்களால் ஏற்க முடியவில்லை, பாருங்கள்.
- T.J.S

Anonymous said...

//A R Rehman was not a brahmin. He was a Mudaliyar Hindu before he converted to Islam.
I hope some day he will regret that and come back to Hindu fold as Dileep kumar S/O R.K Shekar.//

அந்த பஹவானுக்கே இது அடுக்காது. என்ன கொடும சங்கரா சங்கரா...

Chellamuthu Kuppusamy said...

//வெங்காயச் சாம்பார் என்பது ஒரு படிமம். அவ்வளவே. எளிதில் புரிந்து கொள்ளப்படக்கூடிய ஒன்று.//

:-) Guess you didn't intake Pons' sense of humour. (and mine too).

Anonymous said...

//காஷ்மீர்ல குண்டு வெச்சா இங்க நல்லகவுண்டபாளையத்து சையத் அலியக் கூட தீவிரவாதியாத்தானே பார்க்கிறோம்?எல்லாத் துலுக்கனுமா தீவிரவாதி? எல்லா இந்துவுமா தேசியவாதி?//

சும்மா 'நச்சு'ன்னு இல்லாம.......'நச்'சுன்னு இருந்துச்சுங்ணா..............


மு.மாரிமுத்து.

வஜ்ரா said...

//
-வஜ்ரா, மணிகண்டனுடைய பதிவில் வந்தும் உங்கள் கருத்தைப் பற்றித்தான் கவலைப்படுகிறீர்களே தவிர, அவருடைய அரிய கருத்தை உங்களால் ஏற்க முடியவில்லை, பாருங்கள்.
- T.J.S
//

அவர் அவர் கருத்து சொல்கிறார்கள்...அதை நான் ஏற்கவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. அதே போல் அவர் என் கருத்தை ஏற்கவேண்டும் என்றும் நான் சொல்லவில்லை. நான் சொன்னதெல்லாம் தேசீயத்தை எதிர்ப்பவர்கள் ( நிச்சயமாக அவர்கள் வேண்டும்) நம்மில் இருக்கிறார்கள்...அவர்களைப் பகடையாகப் பயன் படுத்தும் தேச விரோதிகளைப் பற்றித்தான்...!!

இந்து தேசீவவாதம் அல்லது இந்துத்வாவாதம் அல்லது இந்துத்தீவிரவாதம் என்றெல்லாம் அழைக்கப்படும் ஒன்று (அது ஏதுவாயினும்) அதை எதிர்ப்பவர்களும் இந்துக்களே...

இஸ்லாமிசம், இஸ்லாமியத் தீவிரவாதம், அது எதுவாயினும் அதை எதிர்ப்பவர்கள் இஸ்லாமியர்களா...? பேசும், சவுண்டு விடும், லவுடு ஸ்பீக்கர்கள் அப்போது மட்டும் கரண்ட் கட் ஆகிப் போனவர்கள் ஆவது தான்...கேள்வி ! அதை மதிப்பிற்குரிய மணிகண்டன் புரிந்து கொண்டார்.

மணிகண்டன் சொல்வது இஸ்லாமியர் அனைவரும் தீவிரவாதிகள் அல்லர் என்பது...அதை நான் ஆமோதித்திருக்கின்றேன்...

பிரச்சனையின் காரணம் என்ன என்பதையும் விளக்கியிருக்கின்றேன்...

"பேசலாம்" என்று சொல்லிவிட்டு பிரச்சனையைப் பற்றி பேசாமல் இருந்தால் எப்படி, அதற்காகவே பேசினேன்...
..

சரி,

எனக்கு ஒன்று தோன்றுகிறது...

வந்தே மாதரம் பாடக்கூடாது என்று சொன்னதற்கு காரணம் அது இந்து மத கடவுளைப் போற்றுகின்றது...அதாவது அல்லாஹ் வைத் தவிர வேறு யாரையும் வணங்ககூடாது வாழ்த்தக் கூடாது என்று சொல்கின்றனர்...!!

தமிழ் தாய் வாழ்த்து பாடுவது பற்றி என்ன நினைக்கின்றனர் இந்த பத்துவா அளிக்கும் ஈமாம் கள்?

சல்மான் said...

நான் உண்மையான இந்தியன் என்பதற்கு யாரும் சான்றிதழ் தரதேவையில்லை. நான் பிறந்த மண் இது. நான் புசித்ததும் இந்த மண்ணிலிருந்தே. என் முன்னோர்களின் வரிசையில் ஏதேனும் ஒருவர் விருப்பபட்டோ அ வலுக்கட்டாயமாகவோ முஸ்லிமாக மாறி அ மாற்றப்பட்டு இருக்கக்கூடும். ஆனால் இப்போது என்னுடைய வழியை தேர்ந்தெடுத்துக்கொள்ள போதுமான சுதந்திரத்தை இந்த சமூகம் தந்துள்ளது. இந்த சுதந்திரத்தை பயன்படுத்திதான் எனக்கு பிடித்த வாழ்க்கை நெறியாக இஸ்லாமை ஒத்துக்கொண்டிருக்கிறேன். அதற்காக பெரும்பான்மை முஸ்லிமல்லாதவர்களின் இந்த சமூகத்திற்கு நான் அன்னியன் என யாரும் சொல்லி விட முடியாது. வந்தே மாதரம் சொல்லுபவன், இந்தியா கிரிக்கெட் மாட்ச்களை விடாமல் பார்ப்பவன், எங்கு குண்டு வெடித்தாலும் முதலில் மன்னிப்பு கேட்பவன், பாகிஸ்தானிய மக்களை விரோதியாய் பார்ப்பவன் என்ற மரக்கட்டை அளவுகோல்களை வைத்து என்னை இந்தியனாக எடைபோடும் த(பி)த்துவ முறைகளுக்கு அகப்படாதவன். வா மணிகண்டன்களும், குழலிகளும், முத்துகளும், மகேந்திரன்களும், அசுரன்களும், சிபிகளும், கோவிக ளும், இன்ன பிற யதார்த்தமான மனிதர்களுமே பெரும்பான்மையாக வாழும் குறிப்பாக தென்னிந்திய பகுதி உள்ளடக்கிய சமுதாயத்தை, வாழ்வாதாரங்களில் குறைகள் பல இருந்தாலும், மனதார நேசிப்பவன். வர்க்க பேதத்தை பெயரிட்டு வளர்த்து சுரண்டியது போல, அதே தந்திரத்தை திம்மி கம்மி என்றும் பெரும்பான்மை இந்து என்றும் புனித பிம்ப பித்தலாட்டத்தை அரங்கேற்றுவதன் மூலம் தன்னுடைய இருத்தலை இங்கே உறுதி செய்யும் தேவை சங்கப்பரிவாரம் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதனுடைய கிளை வலைப்பதிவாரம் வெளிநாடுவாழ் திம்மி செர்டிபிகேட் லெட்டர்பேட் லிமிடெட் க்குதான் உள்ளதென்பதை உணர்ந்துள்ளவன்.


கடைசியாக, இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பு வேண்டும் என அடம்பிடிக்கும் அம்மணியின் (மணி, இந்தக் கட்டுரையில் வெங்காய சாம்பார் பற்றி ஏதும் சொல்லாததைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.), அதற்கும் விளக்கும் தந்த மணியின் டேக் இட் ஈஸி குரூப்பை சார்ந்தவன்

சல்மான்

Amar said...

வா.மா,

சிலர் வந்தே மாதரம் பாட மறுப்பதால் அந்த பாடலுக்கோ - இந்த தேசத்துக்கோ ஒரு கேடும் வரப்போவதில்லை.

இன்று வந்தே மாதரம் பாடுவது குரானுக்கு எதிரானது என்று குல்லா போட்ட முல்லாக்கள் நாட்டின் 15% மக்களை manipulate செய்யவிட்டால் நாளை இந்தியா என்ற political entityயே இஸ்லாத்துக்கு எதிரானது - நமது விசுவாதம்,நோக்கம் இஸ்லாமிய உம்மாவுக்கு தான் என்று manipulate செய்ய மாட்டார்களா?

சில முல்லாக்களை manipulate செய்யவிட்டதால் தானே கோவை குண்டு வெடிப்பு நடந்தது.

இன்னும் அவர்களை தொடர்ந்து செய்யவிடுவது இரண்டாவது பிரிவினைக்கு நாம் போடும் விதைகள்.

பாடுவதும் பாடாததும் அவர்-அவர் விருப்பம்.But how far are you willing to take this?

வரி கட்டுவது கட்டாததும் அவர்-அவர் விருப்பம்? கொலை செய்வதும் செய்யாததும் அவர் அவர் விருப்பம்....

ஏற்கனவே இஸ்லாம் versus உலகம் என்று ஒரு conflict உருவாகிவருவதாக முல்லாக்கள் மிரட்டி வருகிறார்கள்.

என்னை கேட்டால் You have missed the point - RSSஐ திட்டுவதாக நினைத்து கொண்டு முல்லாக்களை ஆதரித்து கொண்டு இருக்கிறீர்கள்.

Attaturk முல்லாக்களை அடித்து நொறுக்கினார் என்றால் காரனமில்லாமலா?

அசுரன் said...

வந்தே மாதரம் பாடல் ஏதோ இஸ்லாமிய விரோத அம்சம் உள்ளதால் மாட்டுமல்ல... அந்த பாடலின் பிறப்பே ஒரு பிற்போக்குத்தனமான விசயமாக உள்ளதால்தான் அதை பாடுவது உழைக்கும் வர்க்கத்துக்கு இழுக்கு என்கிறோம்.

அப்புறம் அதில் முத மூனு வரிய பாடு, நெண்டு வரிய பாடுன்னு சொன்னா..... அத வைச்ச என்ன சாதிக்கப் போறிங்க.....

ஜார்ஜ் புஸ் கூட வந்தே மாதரம் முத மூனு வரிய பாடிக்கிட்டே நம்ம டிக்கில ஆப்பு சொருகுவாறு....(உண்மையிலேயே அதத்தான் அந்த ஆள் செஞ்சாறு) நம்ம வக்கிர பாண்டியர்கள் அவரை தேசபக்தர் என்று தூக்கிவைத்துக் கொண்டு ஆடுவார்கள்....


ஆனால் அந்த பிற்போக்கு பாடலை பாடதவனை தேசபக்தி இல்லாதவன்னு அவதூறு பேசறது....

என்ன அளவுகோலய்யா தேசப்பற்றை அளக்க......?

இத்த சொல்லித்தான் என் பதிவ போட்டேன்.

நம்ம அம்மாவா ஒரு நாதாரி கூட்டிக் கொடுத்திட்டிருக்கான் அத பேசத் தெரியல வக்கிரத்துக்கு..... பாருல(Bar) போடற பாட்ட ஒருத்தன் நல்லான்னு சொல்றான்னு பஞ்சாயத்து....

தூ...... மானங்கெட்ட சும்பன்களா........


ஜன கன மன -வும் ஒன்னும் நல்ல பாடல்லாம் கிடையாது... அதுவும் விளக்கு தூக்குறத அவாய்டு பன்னறுதுக்காக தூக்குவாளி தூக்குன கதைதான்.

நாட்டுல வேற பாட்ட இல்லாத மாதிரி... அத்த விட்டா எல்லார் கோமனமும் கழண்டு அம்மணப்பொச்சா ஆகிற மாதிரி....


//அதே தந்திரத்தை திம்மி கம்மி என்றும் பெரும்பான்மை இந்து என்றும் புனித பிம்ப பித்தலாட்டத்தை அரங்கேற்றுவதன் மூலம் தன்னுடைய இருத்தலை இங்கே உறுதி செய்யும் தேவை சங்கப்பரிவாரம் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதனுடைய கிளை வலைப்பதிவாரம் வெளிநாடுவாழ் திம்மி செர்டிபிகேட் லெட்டர்பேட் லிமிடெட் க்குதான் உள்ளதென்பதை உணர்ந்துள்ளவன்.


கடைசியாக, இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பு வேண்டும் என அடம்பிடிக்கும் அம்மணியின் (மணி, இந்தக் கட்டுரையில் வெங்காய சாம்பார் பற்றி ஏதும் சொல்லாததைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.), அதற்கும் விளக்கும் தந்த மணியின் டேக் இட் ஈஸி குரூப்பை சார்ந்தவன்
//

சல்மான சரியாத்தான் சொல்றாரு....

வர்க்கத்த பத்தி ஏதோ சொல்றாரே அதுதான் பிரிய மாட்டேங்குது....

நன்றி,
அசுரன்

Vaa.Manikandan said...

//அந்த பாடலின் பிறப்பே ஒரு பிற்போக்குத்தனமான விசயமாக உள்ளதால்தான் அதை பாடுவது உழைக்கும் வர்க்கத்துக்கு இழுக்கு என்கிறோம்.//
புரியவில்லை அசுரன்.

பொன்ஸ் என்னிடம் சாட்டில் கேட்டார். இந்த பின்னூட்டம் இந்த விவாதத்தை திசை திருப்புமா என்று. நான் திசை திருப்பாதது போல பதில் சொல்ல முடியும் என நம்புகிறேன் என பதில் அளித்தேன். அது இருவரின் மனதை புண்படுத்தி இருப்பது வருத்தமாக இருக்கிறது.

Anonymous said...

//சிலர் வந்தே மாதரம் பாட மறுப்பதால் அந்த பாடலுக்கோ - இந்த தேசத்துக்கோ ஒரு கேடும் வரப்போவதில்லை.//

அதானே, பின்ன ஏன் இந்த கூப்பாடு? போய் வேலையப் பாருங்கப்பா! போறதுக்கு முன்னாடி, இந்த மாதிரி ஒரு பாட்டு இருக்குன்னு 'போலி தேசபக்தி குத்தகையாளர்'களுக்கெல்லாம் ஞாபகப் படுத்துனாரு பாருங்க அந்த இமாமு.. அவருக்கு ஒரு சலாம் போட்டுட்டு போங்க!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

தேச பக்தி என்பது ஒரு பாடலைப் பாடிதான் வெளிப்படுத்த வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இருந்தாலும் வந்தே மாதரம் என்பது ஒரு பாடல் மட்டும் அல்ல வந்தே மாதரம் என்ற கோஷம் தான் சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கியமான அங்கம் வகித்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இதில் முஸ்லீம்கள் எங்கள் மதத்திற்கு ஒப்பவில்லை ஆகவே நாங்கள் இதனைப் பாட மாட்டோம் என்று சொல்வதும் தவறு. அதே நேரத்தில் அவர்கள் அப்படி சொல்கிறார்கள் ஆகவே அவர்கள் நாட்டின் எதிரிகள் என்று குதிக்கும் இதை வைத்து எப்படி துவேஷங்களை வளர்க்கலாம் என்று பார்த்துக் கொண்டு இந்த சந்தர்ப்பத்தை உபயோபகப் படுத்திக் கொள்ள துடிக்கும் மத தீவிரவாதிகளும் செய்வதும் தவறுதான். இந்த பதிவில் இந்த சென்ஸிடிவான விஷயத்தை நாசூக்காக சொல்லி இருக்கிறீர்கள். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

Muse (# 01429798200730556938) said...

இந்திய கொடியை வணங்குவதும் ஒருவகையான உருவ வழிபாடுதான் என்று சொல்லி ஃபத்வா போடுவார்கள்.

கொடியில் காவி நிறம்வேறு இருக்கிறது. ஹிந்துத்துவா கெட்ட வார்த்தை என்றால். காவி கெட்ட கலர். இந்த கலர் இருக்கிற கொடியை வருடா வருடம் ஏற்றி அதற்கு ஒரு இஸ்லாமியர் ஸல்யூட் அடிப்பது தப்பு. இஸ்லாத்திற்கு எதிரானது. அதனால் இந்த காரணத்திற்காக போடப்படவிருக்கிற ஃபத்வாவை நாம் இப்போதே ஆதரித்துவிடுவோம்.

ஆந்திராவில் அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தை தொழுகைக்காக உபயோகப்படுத்தி பின்னர் தொழுகை நடந்ததாலேயே அங்கே தேசிய கொடியை ஏற்றக்கூடாது என்று ஏற்கனவே சொல்ல ஆரம்பித்தாயிற்று.

அப்படியெல்லாம் சொல்வதால்தான் ஹஜ் யாத்திரைக்கு ஹிந்துக்களின் வரிப்பணத்திலிருந்து பணம் கிடைக்கிறது. ஹிந்துக்கள் அமர்நாத்திற்கு போகக்கூட சரியான வழியின்றி, போனால் புனிதப்படையினரின் குண்டடியில்லாமல் திரும்பிவருவோம் என்கிற உத்தரவாதமின்றி இருக்கிறார்கள். காசிக்குப் போகிறவர்களுக்கு கழிப்பறை வசதிகள்கூட கிடையாது. காசியும், கங்கையும் நாறுகிறது.

மதச்சார்பற்ற, த்ராவிடர்களின் ஒட்டுமொத்த ப்ரதிநிதியாகவுள்ள திமுக சுதந்திர தினத்திற்கு இதுவரை கொடியேற்றியதில்லை. எனவே அவர்கள் நடுநிலையானவர்கள்.

நாமும் நடுநிலையானவர்களாகவே இருப்போம். நம் பிள்ளைகள்தான் பிடித்த தெய்வத்தை வணங்கவும், எந்த தெய்வத்தையும் வணங்காதிருக்கவும் இருக்கும் உரிமையற்ற ஒரு மதத்திற்கு மாறப்போகிறார்கள். அப்படி ஒன்றும் பெரிய ஆபத்து எதுவும் நமக்கு வந்துவிடவில்லை. கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்றால் நாமும் நல்லவர்கள்தான்.

******************************

தற்போது பாடப்படும் தேசிய கீதம் உண்மையில் நம்மை ஆண்ட இங்கிலாந்து அரசை போற்றிப்பாடியது. வந்தே மாதரம் பாட எதிர்ப்பு இருப்பதால் நம்மை அடிமையாய் வைத்திருந்தவர்களைப் போற்றி ஒவ்வொரு சுதந்திர தினத்தையும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், இந்த சமரசமும் சமரசம் என்கிற வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனால், இப்படி ஒவ்வொன்றாக ஃபத்வா விதித்துவந்தால் கடைசியில் என்னாகும்?

இப்படி பார்ப்போமே. இவர்கள் ஏன் ஃபத்வா விதிக்கிறார்கள்? ஃபத்வா விதிக்காதபோதும் பல விஷயங்களை எதிர்க்கிறார்கள் (ஜீவனாம்ஸ பிரச்சினை உட்பட). ஏன் ? ஏனெனில் ஒரு செயல், ஒரு பொருள் இஸ்லாத்திற்கு எதிராக இருக்கிறது என்பதற்காக. அதாவது இஸ்லாத்திற்கு எதிரான விஷயங்கள் எதுவும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பது. இது ஒரு முழுக்க முழுக்க இஸ்லாமிய நாடாகவிருந்தால் நடைமுறையில் இவர்கள் சொல்லுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனால் மற்ற மதத்தினரும் வாழ்ந்து தொலைக்கும் நாடாக இது இருந்துதொலைப்பதால், ஒன்று இவர்களுக்காக மற்றவர்களும் இஸ்லாத்திற்கு எதிரான விஷயங்களை தவிர்க்கவேண்டும், அல்லது இவர்கள் மட்டும் ஒரு நாட்டுக்குள்ளேயே ஒரு தனி உலகம் பெற்று வாழ ஆரம்பிப்பார்கள் - அதாவது நாட்டிற்குள்ளேயே இன்னொரு நாடு.

இப்படி இருந்தால் மட்டுமே மற்றவர்கள் பிழைக்க முடியும் என்கிற நிலமை இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படி ஒரு அபாயம் நம்மை சூழ்ந்திருப்பது பற்றி தாங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

Anonymous said...

//ஆந்திராவில் அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தை தொழுகைக்காக உபயோகப்படுத்தி பின்னர் தொழுகை நடந்ததாலேயே அங்கே தேசிய கொடியை ஏற்றக்கூடாது என்று ஏற்கனவே சொல்ல ஆரம்பித்தாயிற்று.//


மியூஸ்,
நிறைய விஷயங்களில் நீங்களே நீதிபதியாகச் செயல்படுவதை நினைத்து சிரிப்பதா? அழுவதா? தெரியவில்லை.

//அப்படியெல்லாம் சொல்வதால்தான் ஹஜ் யாத்திரைக்கு ஹிந்துக்களின் வரிப்பணத்திலிருந்து பணம் கிடைக்கிறது. //

ஹஜ் யாத்திரைக்கு பணம் முஸ்லிம்கள் கேட்கவில்லை. இயலாத முஸ்லிமுக்கு ஹஜ் கடமையுமல்ல என்று கேள்விப்பட்டுள்ளேன். ஹஜ் யாத்திரைக்கு பணம் வழங்கி 'ஃபிலிம்' காட்டுகிற 'அரசியலை' விடுத்து முஸ்லிம்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இடஒதுக்கீடு அளித்து அதிகமதிகம் ஒடுக்கப்பட்ட அந்தச் சமுதாயத்தை முன்னேற்ற யாருக்கும் அக்கறையில்லை என்பதிலிருந்து இந்நாட்டின் உயர்குடி 'லாபி'யை புரிந்துக்கொள்ளலாம்.

//இந்து தேசீவவாதம் அல்லது இந்துத்வாவாதம் அல்லது இந்துத்தீவிரவாதம் என்றெல்லாம் அழைக்கப்படும் ஒன்று (அது ஏதுவாயினும்) அதை எதிர்ப்பவர்களும் இந்துக்களே...//

வஜ்ரா அவர்களே!
நுட்பமாக ஆராயும் போது 'இதன் வித்தியாஸம்' விளங்கும். 'யார் முஸ்லிம் இல்லையோ, யார் கிறிஸ்தவன் இல்லையோ, அவனெல்லாம் இந்து' என்கிற வினோத விளக்கத்தால் விளைந்த;விளைகின்ற குழப்பமிது. அவஸியப்படும் போது தான் நாம் அவனையும் 'இந்து'வாக்கிக்கொள்கிறோம். இந்து அல்லது ஹிந்து மதத்தின் அவதாரங்கள் பற்றியோ வேத புராணங்கள் பற்றியோ 'ஒரு மண்ணும்' அறியாதவர்களும் அது குறித்த கவலையற்றவர்களும் ஒற்றை முத்திரையில் 'இந்து'வாகிவிடும் 'பம்மாத்து' சிறுபான்மையினர் மீதான 'அதீத அக்கறை'யால் நிகழ்வதே!

இன்னும் நேரடியாகக் கேட்பதென்றால் "வேதம் அறிந்த, சனாதன தர்மம் பேசுகிற எத்தனை பிராமணர்கள் பிராமணீய மதத்தின் (கவனிக்க, 'இந்துமதத்தின்' அல்ல) அபத்தங்கள் குறித்து பேசுகிறோம்?

அவ்வளவு ஏன்? "(உன்)புனித நூலை விட்டு வெளியே வா" என்று அடுத்துள்ள அப்துல் காதிரையும் அந்தோணியையும் வற்புறுத்துவதில் அக்கறையும் அங்கலாய்ப்பும் அதீதமாகக் கொண்டுள்ள எத்தனை பிராமணீயர்கள் 'பூணூலை' விட்டு வெளியே வந்திருக்கிறார்கள்?

'பூணூல்' என்பதன் அருஞ்சொல்பொருள் புரையோடிய நால்வர்ண ரேகைக் கோடு அல்லவா?
- T.J.S

வஜ்ரா said...

ஆனா ஒண்ணு மணிகண்டன்.

இங்கெ வந்தே மாதரம் சொல்ல மாட்டேன்னு சொல்லிச் சொல்லியே...வந்தே மாதரம் சொல்லிட்டாங்க பாத்தீங்களா?

நம்மள கடசில கேணையாக்கிட்டாங்க...!! :D

TJS (எ) அனானி,
..
ுட்பமாக ஆராயும் போது 'இதன் வித்தியாஸம்' விளங்கும். 'யார் முஸ்லிம் இல்லையோ, யார் கிறிஸ்தவன் இல்லையோ, அவனெல்லாம் இந்து' என்கிற வினோத விளக்கத்தால் விளைந்த;விளைகின்ற குழப்பமிது. அவஸியப்படும் போது தான் நாம் அவனையும் 'இந்து'வாக்கிக்கொள்கிறோம். இந்து அல்லது ஹிந்து மதத்தின் அவதாரங்கள் பற்றியோ வேத புராணங்கள் பற்றியோ 'ஒரு மண்ணும்' அறியாதவர்களும் அது குறித்த கவலையற்றவர்களும் ஒற்றை முத்திரையில் 'இந்து'வாகிவிடும் 'பம்மாத்து' சிறுபான்மையினர் மீதான 'அதீத அக்கறை'யால் நிகழ்வதே!
..

you got it totally wrong...

அன்று சாவர்கர் சொன்னது, இந்தியாவில் (ஒன்றுபட்ட) தன் மதப் புனிதஸ் ஸ்தலங்கள் கொண்ட அனைத்து மதத்தினரும், இந்தியாவை தன் மாத்ரு பூமி, பித்ரு பூமியாக நினைப்பவர்கள் இந்துக்கள் என்று.

சிறுபான்மையினரைத் தனிமைப்படுத்திவிட்டு மற்றவர்கள் அல்ல இந்துக்கள். இந்திய மண்ணை மதிப்பவர்கள் நேசிப்பவர்கள் அவர்கள் எந்த மதத்தவராயினும் இந்துக்களே. அவர்கள் கிறுத்தவர் ஆயினும், இஸ்லாமியராயினும் சரி.

//
இன்னும் நேரடியாகக் கேட்பதென்றால் "வேதம் அறிந்த, சனாதன தர்மம் பேசுகிற எத்தனை பிராமணர்கள் பிராமணீய மதத்தின் (கவனிக்க, 'இந்துமதத்தின்' அல்ல) அபத்தங்கள் குறித்து பேசுகிறோம்?
//

அது என்ன பேசுகிறோம்?

நான் வேதம் படித்த பிராமணனும் அல்ல. பூனூல் போட்டவனுமல்ல. நீங்கள் பூனூல் போட்ட வேதம் படித்த பிராமணரா?

//
'பூணூல்' என்பதன் அருஞ்சொல்பொருள் புரையோடிய நால்வர்ண ரேகைக் கோடு அல்லவா?
//

பிராமணர்கள் மட்டுமே பூனூல் போடுபவர்கள் என்ற எண்ணத்தில் உங்கள் துவேஷத்தைக் காட்டுகின்றது உங்கள் இந்த வரிகள்.

Vaa.Manikandan said...

Dear Mr.Vajra shankar,

I couldnt get tamil font in this system. so I am typing in English.
if u dont mind, I can say onething.

Who made u "kenayan"?
nobody but u....u made urself.

வஜ்ரா said...

//
Who made u "kenayan"?
nobody but u....u made urself.
//

is it a joke?

my comment cetainly was!!
because they said they wont say that...!! but every often they come and say we wont say "vande mataram"!!

Vaa.Manikandan said...

Naangal sollap poovathillai enRu avarkaL sollavillai.

They dont want to say that vandemadaram by force.

better... some other islamic brother can give u the proper answer.

வஜ்ரா said...

..
They dont want to say that vandemadaram by force.
..

It all depends on how far are you willing to take it..! என்று சமுத்ரா கேட்டிருக்கிறார். அதைப் பார்க்கவும்.

Besides nobody is forcing them, all they say is respect the land in which your forefathers are born and fought for its freedom! and thats all they ask for.

மவுலான அப்துல் கலாம் ஆசாத் சொன்ன அதே வந்தே மாதரத்தைச் சொல்ல இவ்வளவு அடம் பிடிப்பது ஏனோ?

Anonymous said...

இஸ்லாமியர்களுக்கு வக்காலத்து வாங்குவதால், தான் மற்றவர்களைவிட higher pedestal இல் இருப்பதாக நம்பும் ultra liberal mentality இந்தியாவுக்கு மட்டும் உள்ள தனிப்பட்ட பிரச்சனை இல்லை. இப்படித்தான் இங்கிலாந்திலும் எவ்வளவோ பேர் கத்தியதை கண்டுகொள்ளாமல் இஸ்லாமியர்களை ஆதரித்தார்கள். இன்று அங்கு நிலைமை என்ன? எங்களுக்கு தனி சட்டம் வேண்டும் என்று ஆரம்பித்தாகிவிட்டது. முடிந்தவரை உலகத்தை இஸ்லாமியமாக்குவது தான் அவர்கள் நோக்கம். அதனால் மற்ற மதத்தை சார்ந்தவர்களெல்லாம் infidels என்று சொல்லி முடிந்தால் மதமாற்றம் செய், மறுத்தால் கொன்றுபோடு என்பது அவர்கள் modus operandi. இதை புரிந்துகொள்ளாமல் அவர்களுக்கு ஜால்ரா அடித்தால் ஒருநாள் நமக்கு ஓளரங்கசீப் ஆட்சிதான்!
Those who do not remember history are condemned to repeat it.

இஸ்லாமியர்கள் எல்லாரும் தீவிரவாதிகள் என்று சொல்லவேயில்லை. ஆனால் இந்தியா மட்டுமில்லை, உலகெங்கும் இருக்கும் தீவிரவாதிகளில் பெரும்பான்மையோர் இஸ்லாமியர்கள் என்பது ஒரு கசப்பான உண்மை.

தி.ராஸ்கோலு said...

//அன்று சாவர்கர் சொன்னது, இந்தியாவில் (ஒன்றுபட்ட) தன் மதப் புனிதஸ் ஸ்தலங்கள் கொண்ட அனைத்து மதத்தினரும், இந்தியாவை தன் மாத்ரு பூமி, பித்ரு பூமியாக நினைப்பவர்கள் இந்துக்கள் என்று.
//

வயாக்ரா கலக்கிட்டம்மா.. ஆனந்தக் கண்ணீர் அடக்க முடியலம்மா.. அப்புறம் ஏம்மா திண்ணியம், மண்டைக்காடு பாப்பாப்பட்டி கீரிப்பட்டில்லாம் நடக்குது?

அவியல்லாம் அமெரிக்காவை ஆங் என்ன அது மாத்துரு புத்துரு பூமியா நென்ச்சுக்குட்டானுங்களோ?

Anonymous said...

//இஸ்லாமியர்கள் எல்லாரும் தீவிரவாதிகள் என்று சொல்லவேயில்லை. ஆனால் இந்தியா மட்டுமில்லை, உலகெங்கும் இருக்கும் தீவிரவாதிகளில் பெரும்பான்மையோர் இஸ்லாமியர்கள் என்பது ஒரு கசப்பான உண்மை.//

முழு உண்மையில்லை. ஊடகங்களால் பூதாகரமாக்கப்பட்ட உண்மை இது. உதாரணம் வேண்டுமா: தாவூத் என்கிற கொடியவன் வரை தான் (இந்திய) ஊடகங்களுக்குத்தெரியும். அவனோடு தொடர்புள்ள சுஷ்மாவை (இந்த விஷயத்தில்) தெரியாது.
அங்கலேஸ்வர ஐயர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எழுதிய கட்டுரையைப் படியுங்கள். http://epaper.timesofindia.com/Repository/ml.asp?Ref=VE9JTS8yMDA2LzA3LzIzI0FyMDEyMDA=&Mode=HTML &Locale=english-skin-custom
சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆதிக்க சக்திகளால் நிகழ்த்தப்பட்ட இனக்கலவரங்களை மறைத்து நின்றுக்கொண்டு எழுதாதீர்கள்.


ஷங்கர் 'இந்து'வுக்கு விளக்கமாக, காந்தியின் கொலையில் குற்றச்சாட்டுக்கு ஆளானவரும் வெள்ளையரிடம் மன்னிப்புக்கடிதம் கொடுத்தவருமான ஒரு "வீர"ரின் வார்த்தைகளை 'வேதமாக'க் கொண்டு வருகிறார் என்பதால் சொல்வதற்கு எதுவுமில்லை - சிரிப்பைத் தவிர. அடுத்து அவர் "வன்முறையை கையிலெடுங்கள்" என்று சொன்ன கோல்வல்கரை கொண்டு வரக்கூடும்
-தா.ஜ.ச

Anonymous said...

//அன்று சாவர்கர் சொன்னது, இந்தியாவில் (ஒன்றுபட்ட) தன் மதப் புனிதஸ் ஸ்தலங்கள் கொண்ட அனைத்து மதத்தினரும், இந்தியாவை தன் மாத்ரு பூமி, பித்ரு பூமியாக நினைப்பவர்கள் இந்துக்கள் என்று.
//

வயாக்ரா கலக்கிட்டம்மா.. ஆனந்தக் கண்ணீர் அடக்க முடியலம்மா.. அப்புறம் ஏம்மா திண்ணியம், மண்டைக்காடு பாப்பாப்பட்டி கீரிப்பட்டில்லாம் நடக்குது?//////

ரிப்பீட்டு. எங்க வக்கிரத்த காணும். வா வந்து ஏதாவது இதுக்கும் பினாத்து.

Anonymous said...

நாட்டுப்பற்றில் இந்திய முஸ்லிம் யாருக்கும் சளைத்தவரில்லை. சுதந்தரப்போரில் மற்ற வகுப்பாரை விடவும் சதவீத அளவில் அதிக பங்களித்த சமூகம் முஸ்லிம் சமூகமே.

மேலாதிக்க மனப்பான்மையின் காரணமாக சிறுபான்மையினரையும் தாழ்த்தப்பட்ட பிற்பட்டோரையும் அடக்கி ஒடுக்க நினைக்கும் இந்துத்துவ எண்ணமே இன்று நாட்டில் நிலவும் பிரச்னைக்களுக்கு அடிப்படை.
அது கலகமாக காட்டப்படும் இட ஒதுக்கீடாக இருந்தாலும், எதிர்வினையாக பயமுறுத்தும் தீவிரவாதமாக இருப்பினும், வர்க்க ப்ரசினையின் காரணமான நக்ஸல் ஆனாலும், தேசப்பிரச்னைகளின் மூலவேராக இது தான் உண்மை. மணிகண்டன் போன்ற இளைஞர்கள் இதை உணர்ந்து எழுதுவது நாட்டின் வருங்காலம் பற்றிய நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் முயற்சி. நன்றி மணிகண்டன்.

Muse (# 01429798200730556938) said...

நிறைய விஷயங்களில் நீங்களே நீதிபதியாகச் செயல்படுவதை நினைத்து சிரிப்பதா? அழுவதா? தெரியவில்லை.

நாட்டாமை தீர்ப்பை மாத்து என்று சொல்லலாம். அழவோ சிரிக்கவோ வேண்டாம்.

ஆனால் அப்படி சொல்லுவதற்கு முன்னால், நான் நீதிபதியாக செயல்படுகிறேன் என்பதற்கான காரணங்களையும், அது ஏன் தவறு என்பதையும் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஹஜ் யாத்திரைக்கு பணம் முஸ்லிம்கள் கேட்கவில்லை. இயலாத முஸ்லிமுக்கு ஹஜ் கடமையுமல்ல என்று கேள்விப்பட்டுள்ளேன்.

தாங்கள் இஸ்லாமியர் இல்லை என்பது தெரிகிறது. தாங்கள் சொல்லுவது உண்மை என்றால் மத்திய மாநில அரசாங்கங்கள் ஹஜ்ஜிற்கான பணத்தை ஒவ்வொரு முறையும் அதிகப்படுத்தும்போதும் இஸ்லாமிய அமைப்புக்கள் ஏன் நன்றி தெரிவிக்கிறார்கள்? இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லலாமே.

முஸ்லிம்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இடஒதுக்கீடு அளித்து அதிகமதிகம் ஒடுக்கப்பட்ட அந்தச் சமுதாயத்தை முன்னேற்ற யாருக்கும் அக்கறையில்லை

ஒடுக்கப்பட்ட, ஒடுக்கப்படுகிற சமுதாயங்களுக்கு இட ஒதுக்கீடு உதவி செய்யலாம். ஆனால், பெரும்பாலான இஸ்லாமியர் வறுமையுடன் இருக்க அவர்கள் அந்த மதத்திற்கு மாறுவதற்கு முன்னரே அப்படி இருந்து வந்தவர்கள் என்பதும், இவர்கள் முன்னேற விடாமல் இஸ்லாமிய சமுதாயமே ஒடுக்குகிறது என்பதும் காரணம். எனவே, முதலில் இவர்களை இந்தவிதமான ஒடுக்குதல்களிலிருந்து வெளியேற்றுவதுதான் அவர்களுக்கு நன்மை விளைவிக்கும் செயலாக இருக்கமுடியும்.

வேதம் அறிந்த, சனாதன தர்மம் பேசுகிற எத்தனை பிராமணர்கள் பிராமணீய மதத்தின் (கவனிக்க, 'இந்துமதத்தின்' அல்ல) அபத்தங்கள் குறித்து பேசுகிறோம்? ....

ஹிந்து சமுதாயத்தின் அபத்தங்கள் குறித்து பேசாத ஹிந்துக்கள் யாருமில்லை நண்பரே. இதிலுள்ள அபத்தங்களை வெளிப்படையாக பேசுவதற்கு தயங்குபவர்களுக்கு இங்கே மரியாதையும் இல்லை. ஹிந்து மதங்கள் என்றாலே பார்ப்பனர்களுக்குரியது என்கிற ஆபிரகாமிய சிந்தனையை அடியொற்றி தாங்கள் தங்களுடைய கேள்வியை கேட்கிறீர்கள். ஹிந்துமதத்திலுள்ள பெரும்பாலான ரிஷிகள் பார்ப்பனர்களில்லை.

இதிலுள்ள அபத்தங்களைப் பேசியவர்களில் பலர் பார்ப்பனர்களாக அறியப்படுபவர்கள்தான்.

தாங்கள் பிராமணீய மதம் என்று எதைக்கூறுகிறீர்கள்? ஆபிரகாமிய சிந்தனையை அடியொற்றி உண்மை என்பது தெரியாமல் உளறுவது மட்டுமே உங்கள் நோக்கமாக இல்லை என்றால் விளக்குங்களேன். ப்ளீஸ்.

இந்தியாவில் ஜாதிவெறி என்பதற்கு ஹிந்து மதங்களின் ஒப்புதலில்லை. ஆபிரகாமிய மதங்களினால் ஏற்படும் பிரச்சினைக்கும், ஹிந்து சமுதாயத்திலுள்ள பிரச்சினைக்கும் காரணம் பின்வருமாறு:

ஆபிரகாமிய மதங்களினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அந்த மதங்களை பின்பற்றுவதே காரணம். ஹிந்து சமுதாயங்களிலுள்ள பிரச்சினைகளுக்குக் காரணம் இவர்கள் தங்கள் மதங்களை பின்பற்றாமலிருப்பதே காரணம்.

நாட்டுப்பற்றில் இந்திய முஸ்லிம் யாருக்கும் சளைத்தவரில்லை.

அதைப்பற்றியெல்லாம் யாரும் இங்கே சந்தேகப்படவில்லை. வயக்காடு எனக்குத்தான் சொந்தம் என்று பக்கத்து வயக்காட்டு பண்ணையாரிடமிருந்து குண்டுகள் வாங்கி உடன்பிறந்த சகோதரனை போட்டுத்தள்ளுவதற்குக் காரணம் சொந்த வயக்காட்டின்மீதிருக்கும் வெறுப்பில்லை. அது எனக்கு மட்டுமே சொந்தமாகவேண்டும் என்கிற எண்ணம்தான்.

சுதந்தரப்போரில் மற்ற வகுப்பாரை விடவும் சதவீத அளவில் அதிக பங்களித்த சமூகம் முஸ்லிம் சமூகமே.

எல்லாரும் போராடியிருக்கிறோம். ரத்தம் சிந்தியிருக்கிறோம்.

"அதிக அளவில் பங்களிப்பு" என்று சொல்வீச்சிற்கு ஆதாரங்கள் இருக்கின்றனவா?

பெரும்பாலான இஸ்லாமிய, ஹிந்து அரசர்கள் ஆங்கிலேய அரசை எதிர்த்தற்குக் காரணம் அந்த அரசுக்களை ஆங்கிலேயர் முழுங்க பார்த்ததுதான். இவர்களுடைய நாட்டுப்பற்று இவர்களுடைய எல்லையோடு முடிவடைந்த விஷயம்.

மேலாதிக்க மனப்பான்மையின் காரணமாக சிறுபான்மையினரையும் தாழ்த்தப்பட்ட பிற்பட்டோரையும் அடக்கி ஒடுக்க நினைக்கும் இந்துத்துவ எண்ணமே

அப்படி நினைப்பது இந்துத்துவ எண்ணமில்லை. இந்தியாவில் இருக்கும் பிரச்சினைகளுக்குக் காரணம் ஒவ்வொரு குழுவும் மற்ற குழுவை அடக்கி ஆதிக்கம் செய்வதுதான் காரணம். இதற்கு அவர்களின் சிறுபான்மையினரிடம் புனித நூல்கள் காரணங்களைத் தருகின்றன. ஹிந்துக்களுக்கு சமுதாய பொருளாதார நோக்கங்கள் காரணங்களாகின்றன. இரண்டும் வேறு வேறு தளங்கள். தப்புத் தாளங்கள்.

மேலும், இங்கே இந்தப் பதிவில் பேசுவது வந்தே மாதரம் பாடல் பற்றிய கேள்விகள்தானே. அது பற்றி நான் கேட்டிருந்த கேள்விகளுக்கும், கொடுத்திருந்த தகவல்களையும் பற்றி பேசாமல் வேறு ப்ரச்சினைகள் பற்றிப் பேசுவது கவனத்தை திருப்பும் ஒரு யுக்தியாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.

வஜ்ரா said...

..
ஷங்கர் 'இந்து'வுக்கு விளக்கமாக, காந்தியின் கொலையில் குற்றச்சாட்டுக்கு ஆளானவரும் வெள்ளையரிடம் மன்னிப்புக்கடிதம் கொடுத்தவருமான ஒரு "வீர"ரின் வார்த்தைகளை 'வேதமாக'க் கொண்டு வருகிறார் என்பதால் சொல்வதற்கு எதுவுமில்லை - சிரிப்பைத் தவிர. அடுத்து அவர் "வன்முறையை கையிலெடுங்கள்" என்று சொன்ன கோல்வல்கரை கொண்டு வரக்கூடும்
-தா.ஜ.ச
..

TJS,

அதில் வேதமும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. அது உங்களுக்கு பதிலே.

//
அதத்தானய்யா நானும் சொல்றேன். தூக்கி தூரபோடுய்யா அந்த மேட்டரையும் அந்தாள் பேச்சையும்! முஸ்லிம்களுக்கு யாரு சொன்னாங்கன்றது முக்கியம் இல்லே. என்னா மேட்டரு சொன்னாங்கன்றதுதான் முக்கியம். சரியா?
//

யார் சொன்னார் என்பது முக்கியமில்லை. என்ன சொன்னார் என்பது தான் முக்கியம் என்று இந்த வலைப்பதிவில் வெளியான பின்னூட்டத்தை இதற்கு பதிலாக வைத்துக் கொள்ளுங்கள்...

நேரு, காந்தி, பாரதி கூட அத்தகய "மன்னிப்பு" கடிதங்கள் கொடுத்திருக்கிறார்கள்...உங்கள் தேவைக்கேற்ப சரித்திரத்தை திரிப்பது உங்களைப் போன்றவர்களுக்கு புதிது அல்ல என்பது உலகறிந்த உண்மை.

உங்களிடம் அதைப்பற்றி விவாதம் செய்ய நான் வரவில்லை. முடிந்தால் சொல்லி விட்டு போங்கள் வந்தே மாதரம் என்று. இல்லையென்றால் அந்த ஈமாம் பேச்சைக் கேட்டு செய்வதைச் செய்யுங்கள். நீங்கள் வந்தே மாதரம் சொல்லித்தான் இந்தியாவில் வாழனும் என்று இல்லை. நீங்கள் சொல்லவில்லை என்றாலும் இந்தியா இந்தியா தான்.

நீங்கள் கெட்டுக் குட்டிச்சுவறா போறதுக்கு எல்லா உரிமையும் உங்களுக்கு உள்ளது ஜனநாயகத்தில். அடுத்தவரைக் கெடுக்கும் உரிமை இல்லை.

அந்த ஈமாமுக்கு இஷ்டமிருந்தால் சொல்லட்டும், இல்ல சொல்லாம போகட்டும், முஸ்லீமா இருக்குறவன் சொல்லக்கூடாதுன்னு அவன் யாரு சட்டம் போடுறதுக்கு?

Anonymous said...

//அந்த ஈமாமுக்கு இஷ்டமிருந்தால் சொல்லட்டும், இல்ல சொல்லாம போகட்டும், முஸ்லீமா இருக்குறவன் சொல்லக்கூடாதுன்னு அவன் யாரு சட்டம் போடுறதுக்கு? //

சரியான கேள்வி. இந்தியாவிலே இருந்துகொண்டு, எல்லா ஜனநாயக செளகரியங்களையும் அனுபவிப்பேன், ஆனால் எனக்கு மட்டும் வேறு சட்டம்! இமாம் என்ன நாட்டுக்குள்ளே தனி நாடு நடத்துகிறாரா? இஸ்லாமியர்களுக்கு மட்டும் அவர் தனி பிரதமரா இந்த மாதிரி கட்டளைகளும் பத்துவாக்களும் போடுவதற்கு? சானியா மிர்சாவின் குட்டைப்பாவாடை மேலிருக்கும் அக்கறை இந்த இமாமுக்கு நாட்டின் மேல் இருக்கிறதா?

Anonymous said...

ம்யூஸண்ணா,
உங்களுக்கு வரிக்கு வரி பதிலளிக்க முடியுமென்றாலும், //இங்கே இந்தப் பதிவில் பேசுவது வந்தே மாதரம் பாடல் பற்றிய கேள்விகள்தானே. அது பற்றி நான் கேட்டிருந்த கேள்விகளுக்கும், கொடுத்திருந்த தகவல்களையும் பற்றி பேசாமல் வேறு ப்ரச்சினைகள் பற்றிப் பேசுவது கவனத்தை திருப்பும் ஒரு யுக்தியாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.// என்று நீங்கள் சொல்லி விட்டதால் 'இன்று போய் நாளை வாருங்கள்' (வேறு பதிவுகளில்) என்று சொல்லும் முன்

உங்கள் முந்தைய பின்னூட்டத்தையே (கண்ணாடி அணிந்துக்கொண்டோ, (அ) கண்ணாடி முன் நின்றுக்கொண்டோ) பார்த்தீர்களென்றால் 'யார் கவனத்தை திசை திருப்பியது' என்பது புரிய வரலாம். நன்றி.

சங்கரண்ணா,
//அதில் வேதமும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. அது உங்களுக்கு பதிலே.// என்று சொன்னதன் மூலம் அதுவும் 'ஒப்புக்கு சொல்லப்பட்ட பதிலே' என்று உணர்த்தியமைக்கு நன்றி.

-TJS

தி.ராஸ்கோலு said...

வயாக்ரா.. சாரி.. வக்கிரா

என்னமா ஒன்னோட பதிலுக்கு ஓடோடி வந்த என்ன ஏமாத்திப்புட்டியே.. நாயமா?

சொல்லும்மா கண்ணு திண்ணியம் மக்களோட மாத்துரு பூமி பாகிஸ்தான் தான் அப்டின்னு ஒரு போடு போட்ருவமா.

இந்த துலுக்கப் பசங்க பேச முடியாதுல்ல..

Muse (# 01429798200730556938) said...

அனானி தம்பி,

தங்களிடம் பதிலில்லை என்பதை சொல்லியிருக்கிறீர்கள். அத்தோடு ராமச்சந்திர ப்ரபுவின் கருணையை வேறு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். அது வென்றவர் தோற்றவனுக்குச் சொன்னது. இதையே காப்பியடித்து சொல்லிவிட்டதால் தோற்றவரெல்லாம் வென்றவர் ஆகிவிடமுடியாது.

போய் வாருங்கள் தம்பி.

Muse (# 01429798200730556938) said...

முயூசுக்கும் வஜ்ராவுக்கும் உண்மையில் நாட்டுப்பற்று இருந்தால் ஸாரே ஜஹான்சே அச்சா பாடுவதில் என்ன தயக்கம்?

தஞ்சை கண்ணன்,

ஒரு தயக்கமுமில்லை. தயக்கமிருப்பதாக தாங்களே கற்பனை செய்துகொள்ளுகிறீர்கள் நண்பரே. அந்த பாடலும் ஒரு அருமையான பாடல்தான். நான் அந்த பாடலை பாடுகிறேன். கேட்கிறதா?

இங்கே பேசப்படும் பிரச்சினை ஒரு குறிப்பிட்ட பாடலை பாடக்கூடாது என்று அடாவடி செய்யும் நடவடிக்கை பற்றியதுதான்.

வஜ்ரா said...

காமாலைக்கண்ணன் என்று இருக்கவேண்டும் உங்கள் பெயர்...
கண்டதெல்லாம் மஞ்சள் மாதிரி, பார்ப்பதிலெல்லாம் உங்களுக்கு பார்ப்பான பூதம் தான் தெரிகிறது...

எவன்ய்யா சாரே ஜஹான் சே அச்சா பாட மாட்டேன்ன்னு சொன்னது...? (அந்த பாட்டு எழுதிய கவி பாகிஸ்தானி என்றாலும்)

சங்கராச்சார்யாரோ, சாயிபாபா வோ பத்துவா போட்டாங்களா? போட்டா விட்டுறுப்பீங்களா? ஆளாளுக்கு தேச துரோகி பட்டம் கட்டி பதிவப் பறக்கவிட்டுறுக்க மாட்டீங்க?

இங்க வந்தே மாதரம் பாட மறுப்பவர்கள் சொல்லும் காரணம் பற்றி பேசுங்கள்...உங்கள் இஷ்ட, கஷ்ட, நஷ்டங்களைப் பற்றி அல்ல.

Muse (# 01429798200730556938) said...

இசுலாமியர்கள் நம் நாட்டுப்பற்றை நிரூபிக்க வேண்டியது வந்தே மாதரம் பாடித்தான்னு நீங்க ரெண்டுபேரும் புலம்புவதுதான் ஏன்னு புரியவில்லை.

தஞ்சை கண்ணன் என்கிற பெயரில் எழுதும் நண்பரே,

இஸ்லாமியர்களின் நாட்டுப்பற்றை இங்கே நான் கேள்வி கேட்கவில்லை. இந்த நாடு எல்லாருக்கும் சொந்தம்தான்.

மீண்டும் மீண்டும் நான் சொல்லாததை சொன்னதுபோல ஏன் கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. நாங்கள் இருவரும் கேள்வி கேட்பது பிரச்சினை இல்லாத முதல் இரண்டு பாராக்கள் பாடப்படும் பள்ளிகளை இஸ்லாமியர் ஒதுக்க வேண்டும் என்று ஒரு இமாம் ஃபத்வா எழுப்பியிருப்பது பற்றியதுதான்.

இந்த பாடலை எல்லாரும் கட்டாயமாக பாட வேண்டும் என்றும் நான் சொல்லவில்லை. ஒரு பாடல் பாடப்படுமானால் அந்த பள்ளியை புறக்கணியுங்கள் என்பது அடாவடித்தனம். இதை இப்படியே விட்டால் கிருத்துவ பள்ளிகளில் காலை நேர ப்ரார்த்தனை கூட்டத்தில் ஏசு பிரானை புகழ்ந்து பாடல்கள் பாடப்படுவதையும் எதிர்ப்பார்கள். பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடக்கூடாது என்பர்.

நாம் ஒரு மதத்தை சார்ந்தவர் என்பதற்காக நம் மதம் சாராத அனைத்தையும் எதிர்ப்பது என்பது பக்காவான ரௌடித்தனம். அதற்கு சால்ஜாப்பு சொல்பவர்கள் அந்த ரௌடிகளின் அல்லக்கைகள், அதை அவர்கள் புரிந்து செய்தாலும், புரியாமல் செய்தாலும்.

Muse (# 01429798200730556938) said...

இக்பால் ஒரு அருமையான கவிஞர். மற்றவர்களோடு ஒப்பிடும்போது பரத கண்டத்திற்கே உரிய பரந்த மனப்பன்மை உடையவர். ஹிந்துக்கள் கடவுளின் அவதாரமாக கருதும் ராமக்ருஷ்ண பரமஹம்ஸரை ஒரு புனித அவதாரம் என்றும் அவர் பாடியிருக்கிறார்.

இப்பேற்பட்ட உயர்ந்த இஸ்லாமியர்களின் மத்தியில் ஃபத்வா போடுபவர்களைப்போய் முஸ்லீம்கள் என்று சொல்ல வேண்டிய நிலை வந்திருப்பது இஸ்லாத்தின் தற்கால இழிநிலையையே குறிக்கிறது.

Anonymous said...

//அந்த ஈமாமுக்கு இஷ்டமிருந்தால் சொல்லட்டும், இல்ல சொல்லாம போகட்டும், முஸ்லீமா இருக்குறவன் சொல்லக்கூடாதுன்னு அவன் யாரு சட்டம் போடுறதுக்கு? //

இது மாதிரி அவிங்களும் கேப்பாய்ங்களே..

"சொல்லித் தான் ஆகணும்னு சொல்றதுக்கு நீ ஆரு .....ருன்னு?"

வஜ்ரா said...

விடுங்க மியூஸ்,

ரௌடிப்பய தம் பொண்டாட்டிய தப்பா பார்க்கிறான் என்றால் ரௌடியின் கண்ணில் தவறு என்று சொல்லாமல் மனைவியின் மாராப்பு சரிந்ததனால் தான் அவன் பார்த்தான் என்று சொல்லும் மூடர்களிடம் என்ன பேச்சு...!

தலையை மண்ணில் புதைத்துக் கொண்டு உலகம் இருண்டதாகச் சொல்லும் வான்கோழி அறிவு சீவிக்கள்.

..
இது மாதிரி அவிங்களும் கேப்பாய்ங்களே..

"சொல்லித் தான் ஆகணும்னு சொல்றதுக்கு நீ ஆரு .....ருன்னு?"
..

நீ வோட்டு போட்டு வந்த ஆளு தானய்யா சட்டம் போட்டான்!! அர்ஜுன் சிங்?! ( நீ வோட்டு போடாட்டியும், அவன் தானெய்யா மந்திரி).

When an elected government is putting a rule, it is not betraying the mandate, its only fulfilling it.

அதுக்கப்புறம், அந்தாளு திம்மி மாதிரி தேவையில்ல, கட்டாயமில்லை என்று ஒரு வாக்கியத்தையும் சொல்லிவிட்டார்.

பிரச்சனையைப் பேசக்காரணம்,
பாட மறுப்பவர்கள் ஏன் பாட மாட்டோம் என்று சொல்லும் காரணமே. (மதம் தடுக்கிறது).

Muse (# 01429798200730556938) said...

வஜ்ரா,

நீங்கள் சொல்லுவது புரிகிறது.

ரௌடிகளுக்கு பயப்பட வேண்டியதில்லை என்பதை புரியவைக்கத்தான் நானும் முயற்சி செய்கிறேன். ஏனெனில், இவர்களது பெண்டாட்டிகள் நமது சகோதரிகள் அல்லவா? இவர்களது குழந்தைகள் நமது மருமக்கள் அல்லவா? மானம் கெட்ட பிழைப்பு என்பதை புரிய வைக்கவேண்டும் என்றே தோன்றுகிறது எனக்கு.

உண்மை என்னவென்றால் இந்த பாடலை பாட இஸ்லாம் மதம் தடுக்கிறது என்று சொல்ல முடியாது. ஏனெனில், அந்த பாடலின் முதல் இரண்டு பாராக்களை பாட ஒத்துக்கொண்டுள்ளதும் இதே மதத்தைச் சார்ந்த பெரியோர்கள்தான். இங்கனம் ஏற்பட்டுவிட்ட சமரசத்திற்குப்பின்னும் தேவையில்லாது ஃபத்வாக்களை விதிப்பது இவர்களது ஆதிக்க வெறியை காட்டுகிறது. இந்த ஆதிக்க வெறியினால் நல்ல இஸ்லாமியர்களுக்கும் கெட்ட பெயர்.

Anonymous said...

//ரௌடிப்பய தம் பொண்டாட்டிய தப்பா பார்க்கிறான் என்றால் ரௌடியின் கண்ணில் தவறு என்று சொல்லாமல் மனைவியின் மாராப்பு சரிந்ததனால் தான் அவன் பார்த்தான் என்று சொல்லும் மூடர்களிடம் என்ன பேச்சு...!//

சொன்னாங்களே...! துறவுங்கறதுல்லாம் சாத்தியமே கிடையாது. ரெளடிப்பய தான் 'காமகேடி'ன்னு ஊர ஏமாத்தறான்னு சொன்னாங்களே! (மியூஸண்ணா, பதிவுக்கு சம்பந்தமில்லாத பேசுறதப் பத்தி 'இப்ப' சொல்லமாட்டீங்களே!)

//கட்டாயமில்லை என்று ஒரு வாக்கியத்தையும் சொல்லிவிட்டார்.//

சொல்லிட்டாருல்ல..! நீ ஏன் கெடந்து கூவிக்கினுகீறே?!

//பிரச்சனையைப் பேசக்காரணம்,
பாட மறுப்பவர்கள் ஏன் பாட மாட்டோம் என்று சொல்லும் காரணமே. (மதம் தடுக்கிறது).//

'பூணுல விடாம புடிச்சுக்கறதுக்கு மதம் காரணமா? இல்லே வேற 'அதம்' காரணமா?

Muthu said...

பங்காளி,

தொண்ணூறு கிராஸ் ஆனா சொல்லியனுப்பு..:))

Muse (# 01429798200730556938) said...

மியூஸண்ணா, பதிவுக்கு சம்பந்தமில்லாத பேசுறதப் பத்தி 'இப்ப' சொல்லமாட்டீங்களே

அனானி தம்பி,

சம்பந்தமில்லாமல் பேச ஆரம்பித்தவர்களுக்கு வஜ்ரா பதிலளித்தால் "அவர் பதிலளிப்பது சரியா?" என்று நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். அவர் தங்களது கேள்விக்குத்தானே பதிலளித்தார். ஆரம்பித்துவிட்டு பிறகு "பதில் சொல்லுகிறார், கேள்விகேட்கிறார், இதெல்லாம் நியாயமா?" என்று கூப்பாடு போடுவது, தன் நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களின்மேல் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு பிறகு பதிலடி கிடைத்தவுடன் "ஐயோ, வன்முறை" என்று கூப்பாடு போடுவதற்கு ஒத்தது.

நான் சொன்னபின்னாடியும் இது தொடர்வது தவறு என்று புரிந்து சம்பந்தமில்லாமல் பேசுவதை நிறுத்திவிடுவது பண்பான செயலாகவிருக்கும். என்னை பொறுத்தவரை நாம் அனைவரும் பண்பாளர்களாக நடக்க முயற்சிக்கவேண்டும்.

இப்போது நல்ல தம்பியாய் நடந்துகொள்ளுங்களேன்.

Anonymous said...

மியூஸண்ணா,
//தன் நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களின்மேல் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு பிறகு பதிலடி கிடைத்தவுடன் "ஐயோ, வன்முறை" என்று கூப்பாடு போடுவதற்கு ஒத்தது.//

என்று நீங்கள் எழுதியிருப்பதற்கு,
"அதைத் தான் இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் செய்து வருகிறது" என்று நான் பதில் சொன்னால்

1).அது பதிவுக்கு சம்பந்தமில்லாததாகுமா? ஆமெனில், ரெளடி என்றும் 'மூடர்' என்றும் 'அவைக்குறிப்பு'க்கு கூடாத வார்த்தைகளை வஜ்ரா உபயோகித்தபோது நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை?

//தன் நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களின்மேல் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு//
பாட மாட்டேன் என்று சொல்பவர்களை எந்த அளவுக்கும் சென்று வற்புறுத்துகிற ஆர்.எஸ்.எஸ் குழுவினரின் செய்கை வன்முறை ஆகாதா?

'அவன நிறுத்தச் சொல்லு...' என்று சொல்லாமல்,
நீங்கள் சொன்னதால் நான் நிறுத்தி விடுகிறேன். நன்றி.
உங்கள் நல்லத்தம்பி.

Anonymous said...

Muthu (thamizini) Sir,
Now U can take 90th run

அசுரன் said...

Vaa.Manikandan,


/////அந்த பாடலின் பிறப்பே ஒரு பிற்போக்குத்தனமான விசயமாக உள்ளதால்தான் அதை பாடுவது உழைக்கும் வர்க்கத்துக்கு இழுக்கு என்கிறோம்.//
புரியவில்லை அசுரன்.

பொன்ஸ் என்னிடம் சாட்டில் கேட்டார். இந்த பின்னூட்டம் இந்த விவாதத்தை திசை திருப்புமா என்று. நான் திசை திருப்பாதது போல பதில் சொல்ல முடியும் என நம்புகிறேன் என பதில் அளித்தேன். அது இருவரின் மனதை புண்படுத்தி இருப்பது வருத்தமாக இருக்கிறது. ////

This is what I have posted in my blog ==> http://poar-parai.blogspot.com/2006/08/blog-post_115632792939907853.html

I thought you might have read the article....

Thats okay....

Please read that article now.

For the shake of simple refrence I give some points for the article:

//"நம்முடைய நவாபின் ராஜ்ய பரிபாலனத்தைப் பாரும். மதம் போய் விட்டது; சமூகம் போய் விட்டது; மானம் போய்விட்டது;குலம் போய்விட்டது; இப்போது பிராணனும் போய்க்கொண்டிருக்கிறது.." இது 'ஆனந்தமடம்' நாவலில் வரும் ஓர் உரையாடல். இதில் யாருடைய மதம்-சமூகம்-மானம்-குலம்-பிராணன் போய்விட்டதென்பதைத் தெள்ளெனவே உணரமுடியும்.
அதனால்தான் முசுலீம் அரசர்களிடமிருந்து வங்கத்து மாதாவை விடுதலை செய்த 'ஆங்கிலப் பிதாவை' அன்றைய வங்கத்துப் பார்ப்பன மேல் சாதியினர் மனதார வாழ்த்தினர். வந்தேமாதரத்தின் தோற்றத்திலேயே நாட்டுப்பற்றுக்கு இடமில்லை!
//


//காலப்போக்கில் வங்கத்து வந்தே மாதரம் ஆங்கிலப் பிதாவை எதிர்க்கும் பாரத மாதாவாக மறுபிறவி எடுத்தது. இந்த பாரத மாதா பஜனையை விடுதலைப் போராட்டத்தில் திணித்தது காங்கிரசு கும்பலின் கைங்கர்யமாகும். இந்திய அளவில் இந்து மதமும், பாரத மாதாவும் உருவாக்கப்பட்டு வந்த நிகழ்ச்சிப் போக்கும், காங்கிரசின் பார்ப்பன மேல்சாதித் தலைவர்களும் அவர்களின் பார்ப்பனீய இந்துத்துவக் கருத்தும் 'வந்தே மாதரத்தை'ப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இருந்தன.
//


//பிற மதத்தினரை விடுங்கள், மக்கள் மீது மீளாக் காதல் கொண்ட எந்த ஒரு சுயமரியாதை உள்ள தேச பக்தருக்கும் இந்த பிற்போக்கு போக்கிரி பாடலை தேச பக்தி பாடல் என்றால் கொலை வெறி வரத்தான் செய்யும்.//


*****************


While My posting very clearly exposes all these Muse and Vakra's arguments... They are doing escapism....


If they have the courage I request them to prove that the song is patriotic one......


I am sure it is not.... That is why they are doing escapism....

We say, singning vande madaram is insult to our mother land because - It is not just that the song is religious, not just the song is a trick by Hindhudva Pigs, But becasue the song is not patriortic by it's birth....


Thanks and Regards,
Asuran.

Anonymous said...

அவனுக்கு பூணுல பிடிச்சுக்க மதம் காரணம் என்றால் உனக்கு எதையோ அறுப்பதற்கும் அதில் செங்கல் வைத்து தேய்ப்பதற்கும் அதே மதம் தானே காரணம்? அப்புறம் நீ மட்டும் என்ன ஒஸ்தி? இங்கே பிரச்சனை அது இல்ல தம்பி. அவன் தான் பூணல் போட்டிருக்கான்னு உனக்கு தெரியாம் பேசாதன்னு சொல்றான்ல, அப்புறம் ஏன் கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி பார்ப்பான் பார்ப்பான்னு கூவுற? அடிக்கடி இப்ப்டி கூவினால் உன் தாழ்வு மனப்பான்மை வெளிய வந்துரப்போவுது!

நாங்க எங்க மதத்தில் தப்பு செய்பவர்களுக்கு தண்டனை கொடுப்பதை முழுமையாக ஆதரிக்கிறோம். சங்கராச்சாரியாரை கைது செய்ததற்காக எவனுக்காவது குண்டா வைத்தோம்? நீங்க அதேமாதிரி உங்க மதத்தில் களை புடுங்க தயாரா? அத சொன்னா ஏன்யா கோவம் பொத்துகிட்டு வருது? அதுக்கு உங்க இமாமு பத்துவா போடட்டுமே! ரெண்டு பேரும் களையெடுப்போம். அப்புறம் சந்தோஷமா பிரியாணி, பொங்கல் எல்லம் exchange பண்ணிக்குவோம்.

அத வுட்டுட்டு அவன் இஸ்டாண்டு பார் இஸ்ரேலு, அதனால நான் இஸ்டாண்டு பார் இஸ்லாமு ன்னா?

Anonymous said...

//வஜ்ரா பாபர் மசூதிய இடிச்சவங்கள நீங்க என்னைக்காவது தீவிரவாதின்னு சொல்லி இருக்கீங்களா?//

அந்த மசூதி எப்படி வந்தது அங்கே? என்ன பொறம்போக்கு நிலத்திலயா கட்டினான்? கோவில இடிச்சாமட்டும் நாங்க அஹிம்ஸாவாதியா இருக்கணும் இல்லையா? அதான் துலுக்கப்பசங்களுக்கு காந்தி மேல இவ்வளவு பாசம்!

ஆமாம், என்னவோ எங்க மதத்தில சாதியெல்லாம் கிடையாதுன்னு தம்பட்டம் அடிக்கிறீங்களே, அப்பறம் ஏன் சன்னி துலுக்கனும் ஷிட் துலுக்கனும் அடிச்சிகிட்டு சாவறானுங்க? அதுல எவனானும் ஒத்தான் பூணல் போட்ருக்கானோ?

மருதநாயகம் said...

//
தேவ்பந்தி போன்ற இசுலாமியர்களின் மதரசாவில் நம்நாட்டின் மூவர்ண தேசியக் கொடியேற்றுகிறார்கள். அதேசமயம் நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் நம் நாட்டின் மூவர்ண தேசியக் கொடியேற்றுவதை அவமானமாகக் கருதி காவிக் கொடியை இதுவரை ஏற்றுவதையே பெருமையாகக் கருதி வருகிறார்கள். இந்தளவில்தான் இருக்கிறது நாட்டுப்பற்றுக்கு உரிமை கொண்டாடுபவர்களின் தேசபக்த லட்சனம்
//

அதனால் தான் இந்த கயவர்களை போலி தேசியவாதிகள் என்று அழைக்கிறோம்

Muse (# 01429798200730556938) said...

தஞ்சை கண்ணன்,

தாங்கள் கடைஸியாக சொன்ன விஷயங்களை முழுமையாக ஒத்துக்கொள்ளுகிறேன்.

ஆர். எஸ். எஸ் தேஸிய கொடி ஏற்றுவதில்லை என்பது எனக்கு புதிய தகவல். ஆச்சரியமளிக்கிறது. அதிர்ச்சியளிக்கவில்லை. குழு மனப்பன்மையானது இது போன்று செயல்களை செய்யத்தூண்டக்கூடியதுதான்.

தேசபக்தி என்பது தன் தேசத்தில் வசிக்கும் சகமனிதனுக்கு துன்பம் கொடுக்காமலும், பரஸ்பரம் மற்றவர் மதத்தை மதித்து நடந்து, நாட்டு மக்களை மதரீதியாக பிளவுபடுத்தாமலும் இருப்பதே என்கிற தங்கள் கருத்து உண்மையானதே. ஆனாலும் அதில் பல பிரச்சினைகள் உள்ளன. இந்த பதிவு அதற்கேற்றதில்லை என்பதால் நாம் வேறு ஓரிடத்தில் இது பற்றி கலந்துரையாடுவோம்.

தங்களுடைய கருத்துக்களை பண்பான முறையில் வைத்ததற்கு என் வந்தனங்கள்.

அனானி தம்பி,

கனிவான முறையில் நடந்துகொண்டதற்கு நன்றிகள்.

வஜ்ரா said...

சீக்கிரமே செங்சுரி போடுங்க...வாழ்த்துக்கள்.!

http://www.rediff.com/news/2002/jan/26rday2.htm
//
RSS HOISTS FLAG AFTER 52 YEARS
NAGPUR: The RSS for the first time hoisted the national flag after 52 years at their headquarters at Mahal here on Saturday. The Tricolor was also unfurled at Smruti Bhavan in Reshimbagh, which houses the memorials of first two RSS chiefs, founder Dr Keshav Baliram Hedgewar and Guruji Golwalkar. The RSS had hoisted the Tricolor earlier on August 15, 1947 and on January 26, 1950. PTI
//

அதென்ன கலெக்டர் ஆபீசா டெய்லி கொடியேத்தி வைக்கிறதுக்கு...? besides, கொடி ஏத்திவெச்ச ஆபீஸ்ல வேல பாக்குறவனுக்கெல்லாம் தேசீயம் பொங்கி வழியுதாக்கும்?

//
தேவ்பந்தி போன்ற இசுலாமியர்களின் மதரசாவில் நம்நாட்டின் மூவர்ண தேசியக் கொடியேற்றுகிறார்கள்.
//
உண்மையாவா?
அல்லாஹ் வைத்தவிர யாருக்கும் சல்யூட் கூட அடிக்க மாட்டோம் என்று சொல்லும் அடிப்படைவாதிகள் தியோபந்தி கள்!!

//
இந்த பதிவு அதற்கேற்றதில்லை என்பதால் நாம் வேறு ஓரிடத்தில் இது பற்றி கலந்துரையாடுவோம்.
//

ஆமோதிக்கிறேன்...! ம்யூஸ்.

மருதனாயகம் (எ) அசுரன் (எ) போனபார்டு,

என்னிடம் உங்களிடம் பேச எதுவுமில்லை.

Anonymous said...

//தங்களுடைய கருத்துக்களை பண்பான முறையில் வைத்ததற்கு என் வந்தனங்கள்.

அனானி தம்பி,

கனிவான முறையில் நடந்துகொண்டதற்கு நன்றிகள்.//

அந்தப் பண்பை; கனிவை 'வஜ்ரா' மாதிரி ஆளுங்க கிட்டே எதிர்பார்த்ததே தப்புங்களா?
(உங்கள மாதிரி) நன்றி சொல்ல எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கெடைக்காதான்னு தான்.

Muthu said...

சிறுதுளி பெருவெள்ளம்

Muthu said...

காலத்தால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிது

மருதநாயகம் said...

//
RSS HOISTS FLAG AFTER 52 YEARS
//

ராத்திரி சேவை சங்கம் (RSS)க்கு தேசப்பற்று வருவதற்கு 52 ஆண்டுகள் ஆகியிருக்கு. இவர்கள் தான் தேசியவாதிகளாம். தமாசுப்பா தமாசு

Anonymous said...

ஆஹா முத்து,
சைக்கிள் கேப்ல 100வது அடிச்சு மட்டைய தூக்கிக்காட்டிட்டீங்களே! மொத்தத்துல நீங்க அடிச்சது 2 தான். மறந்துடாதீங்க.

Muthu said...

anony,

:))

அருண்மொழி said...

இந்துத்வியாதிகளின் பார்வைக்கு.

ஒரு முல்லா பத்துவா போட்டு விட்டால் நாட்டில் இருக்கும் சுமார் 13கோடி முஸ்லிம்கள் அதை கேட்டு நடப்பார்களா?

அப்படி என்றால் நாட்டிலேயே அவர் தான் சக்தி மிக்கவரா?

Anonymous said...

Hello, Please let me know adding what vengayam, either chinna vengayam or periya vengayam, makes a tastier vengaya sambar. chinna vengayam costs Rs.96.00 and periya vengayam costs Rs.12.00.

வஜ்ரா said...

முஸ்லீம் அல்லாரும்!! சாம்பார்ல பெரிய வெங்காயம் தான் போடனும்!

சின்ன வெங்காயம் போடுவது இஸ்லாத்திற்கு எதிரானது...

- இமாம் புகாரி (புகாரி ஹோட்டல் நிர்வாகம் சார்பாக இந்த சாம்பார் பத்துவா!)

Anonymous said...

Hi Vajra, I post this comment to just add some fun and I never expect that there will be such reply comments.

Blog Owner, please remove my comment.

Anonymous said...

இந்த நாட்டுல இருக்கணும்னா அவதாரப் புண்ணாக்குகள 'கறி'யில சேத்துக்கணும்னு 'ஆரிய'பவன்ல ஒரு பத்துவா போட்டாங்கள, அத மறந்துட்டீங்களே, வஜ்ரா சார்.

வஜ்ரா said...

//
அப்படி என்றால் நாட்டிலேயே அவர் தான் சக்தி மிக்கவரா?
//

அந்த முட்டாள் போட்ட பத்துவாக்கு பயந்து நாட்டின் மனித வள மேம்பாட்டு துரை அமைச்சர் தான் போட்ட சட்டத்தை திருத்துகின்றார் என்றால்...என்ன் அர்த்தம்?

கம்யூனிஸ்டுகள் கூட இதை வன்மையாகக் கண்டித்திருக்கின்றனர்.

..
எல்லாப் புகழும் துலுக்கனுக்கே. ஏ.ஆர்.ரஹ்மான் மட்டும் வந்தேஏஏஏஏஏஏஏஏஏஏ மாதரம் பாட்டுக்கு புது music போடவில்லை என்றால் நாட்டில் பாதி பேருக்கு அப்படி ஒரு பாட்டு இருப்பதே தெரியாது.
..

அருண்மொழியின் அருள்வாக்கு!! பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடாது...

கேசட்டு சீடியில் இதுவரை வந்த மாதரம்!!

Serial No. / Company, Label / Record Number (year) / singers and other details

1] Nicole Records / C 465 (c.1905) / Narain Chandra Mukherjee

2] Nicole Records / C 436 (c.1907) / Narain Chandra Mukherjee

3] H.Bose's Cylinder Record / 250 (c.1906) / Rabindra Nath Tagore (Concert size)

4] H.Bose's Cylinder Record / s 250 (C.1906) / Sevak Sampradaya (Standard size)

5] Pathe / H.Bose's double sided vertical cut Record / 3511 (C.1908) / Rabindra Nath Tagore

6] Pathe / H.Bose's double sided vertical cut Record / 3512 (C.1908) / Sevak Sampradaya

7] H.Bose's Record / Pathe / 36-250 (C.1908) / Rabindra Nath Tagore (Standard size record - 250 ml.)

8] H.Bose's Record / Pathe / 36-350 (C.1908) / Rabindra Nath Tagore (Concert size record - 150 ml)

9] Gramophone Monarch Record (12") / 012112 (1906) / R.N.Bose

10] Gramophone Concert Record (10") / 5 - 12638 (1906) / Narain Chandra Mukherjee

11] Gramophone Concert Record (10") / 5 - 12639 (1906) / Narain Chandra Mukherjee

12] National Grand Record / 20290 / Babu Surendranath Banerjee

13] Beka Grand Record / 21125 (1908) / Babu Hem chandra Sen

14] National record / 462 / 541 (1907) / Narain Chandra Mukherjee

15] Odeon Record (10 3/4") / 94131 (1911) / Satya Bhushan Gupta

16] Viel-O-Phone Record / T 6003 (1912) / Desh Dass

16A] Viel-O-Phone Record / VR 1567 [1073-74] Raga Desh - complete song in two parts.

17] Phon-O-Phone Record / G 438 / 1029 (C.1910) / Savlaram Boa, Mumbai / sung in Raga Kalingada.

18] Binapani Record / Just newspaper advt.(1908) only. Actual record not seen.

19] H.M.V / P 5182 (C.1920) / Harendra Nath Dutt

20] Hindustan Record / H 570 (C.1940) / Prova Roy, Jay Dass, Vijaya Devi, Dhiren Gupta, Haripada Chatterjee. - specially trained by Dr Rabindranath Tagore. Musical Direction by Sj. Haripada Chatterjee.

21] Megaphone Record Company / J.N.G. 5224 (C.1935) / Bhabani Charan Dass - in two parts - Matrix numbers - DMC 8661/8662.

22] H.M.V / N 6944 (C.1950) Matrix number - OMC 8468 / Matruesvak Dal - Music by Kamal das Gupta

23] Ananda Bazaar, Hindustan Record (12") / AHR 1 (C.1938) / Chorus in Raga Durga. Music by Timir Baran.

24] Columbia GE 3132 (C.1935) / Pt.Omkarnath Thakur - Raga Bangiya Kafi

25] Columbia BEX 201 (12") [C.1935] / Pt.Omkarnath Thakur

26] Columbia 7 EPE 4227 (C.1965) / Pt.Omkarnath Thakur [reissued]

27] Rhythm House Classic 240 361 (c.1990) / Live recording in Mumbai c.1960.

28] Young India TM 8463 (C.1948) / N.R.Bhattarcharya and Party

29] Young India TM 8474 (C.1948) / side 1-Trumpet,Jhanj and Piano, side 2-Shing and Chaughada. Music - Mr Vasant Desai

30] Young India TM 8475 (C.1948) / side 1 - sung and music by Mr Vasant Desai

31] Young India TM 8476 (C.1948) / side 1-Shing and Chaughada,side 2 - for use in theaters. The tunes are like the marching songs.

32] H.M.V. N 17014 (C.1950) / Sati Devi, Kamal Das, Ajay Biswas, Somen Gupta. Music Direction - Sur Sagar

33] H.M.V. HT 80 (12") [C.1945] / Dilip Kumar Roy

34] H.M.V. N 14421 (C.1950) / Dilip Kumar Roy, and M.S.Subbulaxmi

35] Columbia GE 3997 (C.1950) / Bai Mogubai Kurdikar, Raga - Khambavati. Music - Mr V.D.Ambhaikar

36] Columbia GE 7357 (C.1950) / Surshree Orchestra - conducted by Rajan Sarkar

37] H.M.V. N 20109 (C.1950) / Vocal and instrumental by Sur Sagar Jagmohan. Side one - vocal, Side two - instrumental.

38] H.M.V. N 27829 (C.1950) / Jagonmoy Mitra, Dwijen Chowdhury, Debbrata Biswas, Niharbindu Sen, Kanak Das, Suchitra Mukherjee, Supriti Ghosh, Gita Nabar. Music Direction - Anadi Dastidar.

39] H.M.V. N 27893 (C.1950) / Jagonmoy Mitra, Beehu Dutta, Roma Devi, Supriti Ghosh. Tune and Music Direction - Timir Baran.

40] H.M.V. N 28000 (C.1950) / Smt.D.Vasanta and D.Vimala (Tamil)

41] H.M.V. N 28002 (C.1950) / Miss D.Vasanta (Tamil)

42] H.M.V. N 16872 (C.1950) / Varat Vyas and Party (Hindi)

43] H.M.V. N 16331 (C.1950) / Ram Asram Girl's School (Hindi)

44] Hindustan Records / H 1348 (C.1940) / Pankaj Mullick and others. Orchestra with vocal refrain.

45] H.M.V. P 11361 (C.1928) / Vishnupant Pagnis - Raga Sarang. The same track is reissued on Rounder CD 1083 (1993) Vintage Music From India - North India - track no.17

46] Ramagraph R 920 (C.1930) / 6029-30 / Vishnupant Pagnis - Part 1 & 2.

47] H.M.V. N 36170 (C.1950) / Geeta Roy and Durani

48] Columbia GE 17512 (C.1938) / Master Krishnarao - Raga Jhinjhoti

49] H.M.V. N 16939 (C.1951) / Chorus - Vishwa Bharati Artists

50] H.M.V. N 16985 (C.1951) / Chorus - Brass Band Group

51] Senola Records / QS 711 (C.1935) / Chorus from Film 'Bande Mataram' (Bengali). Tune - Sukerti Sen.

52] H.M.V. PMLP 1703, cassette STHV 24172 (C.1965) / " Shraddhanjali" (LP) / Hemanta Mukherjee and others - from Bengali film ' Mahabiplavi aurobinda '

53] H.M.V. N 27606-611 (C.1950) / Bengali Drama Set Records - 'Anand Math' - Dramatized by Manmatha Roy.

54] Columbia GE 7323-29 (C.1950) / Bengali Commentary Drama set Records - 'Swadhintar Saadhana [part of the song only] / by Sachin Sen Gupta, Music - Durga Sen.

55] Test Record / ?? / Chandra Bandorey - more or less in the tune as sung by Pt.Omkarnath Thakur.

56] H.M.V. N 82936 (1962) / Chorus - AIR Choral Group

57] H.M.V. 7EPE 1006 (1965) / Chorus - AIR Choral Group

58] H.M.V. (LP) ECSD 35518 (C.1970) / Bharati Songs - I / Smt.M.S.Subbulaxmi (Tamil Version), side two - track one (different tune).

59] Odeon A 245012 b (C.1935) / Vande Mataram / Mr Keshav Rao Bhole - in Raga Deshkar.

60] Star Hindustan Record JSA 5305 (C.1940) / Shobha Khanna, Kamala and Suresh. Music - Purshottamdas Jalota.

61] Music India EP 2067 842 (1982) by Mahendra Kapoor and Chorus - National songs. - arranged and conducted by Y.S.Mulki.

62] Janata Audio (JA 1001, Calcutta) cassette - 'PREYRONA' / side one - Sree Radha Bandopadhyay, side two - Haimanti Shukla. Sung by two artists in two different tunes. Tribute by W.B.P.C.C .: 50 years of independence and birth centenary of Netaji Subhash Chandra Bose. Commemorating 80th session of Indian National Congress, 8-10 August 1997, at Calcutta - W.B.P.C.C. President Sj.Somen Mitra.

63] In Hindi film - "Amar Asha' [Immortal Hope] Music - No gramophne record was issued. Singers are not known.

64] H.M.V. N 50169 (C.1952) / Lata Mangeshkar and others - Film 'Anandmath' (Hindi). Music - Hemant Kumar. Reissued in Vande Mataram - 2 (1999) HMV TPHVS-854 126

65] In Hindi film 'Aandolan' (1951) / Manna Dey, Shaileshkumar, Sudha Malhotra, Parul Ghosh and others / Music - Pannalal Ghosh.

66] In Hindi film 'Leader' (1964) / used as a background chorus score for the credit titles. / No record made - music by Naushad. Tune is like marching song.

67] In Hindi and English film - 'Making of Mahatma' (1996) / sung by Usha Utthup / Music by Vanaraj Bhatiya.

68] Sony Music 488 7094 (1997) / sung by Anuradha, Sujata, Kalyani Menon and Seema / Music by A.R.Rehman.

69] HMV SPHOS 854083 (1996) / Mere Vatanke Logo [50 years of India's Independence] / Lata Mangeshkar : New Recordings.

70] HMV TPHVS 854124 (1998) - Vande Mataram 2, Bharatbala Productions. 1) Lata Mangeshkar - Vande Mataram 1998 & 1952, Jai Jai Mataram by Shubha Mudgal and Tarana by Kaushiki Chakravarthy.

71] Polygram 6337 763 (1999) - A tribute to Nation - India Tu Hai Meri Pooja - nine patriotic songs first time sung by Shree Anup Jalota.

72] LDER [Little Darling Educational Rhythms] presentation, New Delhi (1999) - Desh Bhakti Geet - sung by Vandana Bajpai and others.

73]Fountain FMB 509 (2000) - Bharat 2000 - Top 10 Desh Bhakti Geet, Music by Prasad Ranade. [Various artists]

74] Sagarika (cassettee) 31065 (1998) - 'Swadesh Aamar Swadesh' - compilation of 14 Bengali patriotic songs - issued by Paschimbanga Rajya Sangeet Academy and sung by the students of academy.

75] Wings (cassette) - SSDH/WHC (Jan.2000) - 'Saare Jahanse Achha Hindustan Hamara' - Patriotic songs:side A - sung by Sadhana Sargam, Bipin Sachdeva, Vinod Rathod and chorus [in same tune sung by Lata Mangeshkar in 'Anandmath'].

76] Cassettee HMV SPHOS 843255 (8/1999) - Vande Mataram - Tunes of Bengali patriotic songs - played by Calcutta Cine Musicians Association under the direction of Pandit V.Balsara - side one - song no.1.[AIR tune].

77] Genious Rabindranath Tagore CD [June 1999] - Bande Mataram [2 minutes and 40 seconds duration song reissued from Pathe / H.Bose disc (originally sung by Dr Rabindranath Tagore)]. Recording digitally remastered from Germany.

A book - ' Rabindranath Tagore : Facets of a genious ' - published by Director General of All India Radio - CD / cassettee available with this book.

78] CDNF 154034/35 (1997) - 'Voices of freedom' - sung by Auro Mira choir group, Shree Aurobindo Ashram. [Also issued on audio cassettee].

Song sung / telecast, broadcast etc, but not recorded for commercial release

1] Pandit Vishnu Digambar Paluskar - in Raga Kafi. Sung at 1923 Kakinada Congress Convention ignoring the opposition of muslim leaders.

2] Mr Anandbihari Telang - Raga Desh.

3] Mr S.S.Nigani - Raga Bhairavi.

4] Dr Lalmani Mishra - Raga Malkauns.

5] Mr Balwant Bhatta - Raga Sarang.

6] Test records of Mr V.D.Ambhaikar - Three versions recorded (1948). These are vocal, Instrumental and chorus recordings. Mr Ambhaikar set this song in many different ragas since his childhood. He sang it to almost all the great national leaders and at several congress conventions. He spent most of his life in popularizing these tunes and formed 'Vande Mataram chorus Party' for this purpose. On the insistence of Dr B.R.Ambedkar he cut three records and were played to the members of Parliament.

7] Test Records of Master Krishnarao - Chorus and Band. (C.1938)

8] Recording from private program of Master Krishnarao. - first two stanzas. (C.1952)

9] Recording from private program of Pandit Ram Marathe. (C.1960)

10] Recordings of son of Pandit Shankar Abhyankar. (C.1955)

11] Bengali Film - 'Anand Math' - by Satish Dasgupta, music - Subal Dasgupta (13th September 1951)

12] Bengali Film - 'Sabuj Dwiper Raaja' - by Tapan Sinha (17th August 1979), music - Tapan Sinha

13] In a special session of Parliament - on 14th August 1997 - Pandit Bhimsen Joshi sang first stanza of 'Vande Mataram' in Raga Desh. In the same session Smt.Lata Mangeshkar concluded the song 'Saare Jahanse Acchha' by the words 'Vande Mataram'.

14] Pandit Jasraj sang 0n 15th August 1998 in Parliament.

15] Sanskar Bharati Cassette - sung by Smt.Chitra Joshi.

16] Geet Bharati Cassette, Bangalore - full song sung by Mr Shankar Shanbhag.

17] Ustad Rashid Khan sung Vande Mataram in a concert of classical music organized by IMG group of St.Xavier's college in Mumbai (1999).

18] Sung by eminent researcher Mr Anant Chakraborty (partly) in an unpublished audio cassette. This recording was done on 8th May 1990. Tune is in Raga Mallar as directed in the novel 'Anandmath' by the author Bankimchandra Chatterjee.

19] Sung by Smt.Sapana Chattopadhyaya in Raga Mallar (as set by Mr A.Chakraborty) in an unpublished cassette. The song was first sung on the lawns of Sahitya Samrat Bankimchandra's ancestral house at Kathalpara, Naihati, on 8th April 1994 and also on his birthday in 1994. [A copy of this recording is available with Mr S.K.Chatterjee by courtsey of Mr Ajitkumar Bhattacharya, Bhatpara,West Bengal]

20] Sung by Shri Jagonmoy Mitra in two different tunes, set by himself in an unpublished cassette - Courtsey - Shri. Dipankar Chattopadhyaya.

21] Sung by 'Indira Sangeet Shikshayatan' - Akashbani, Calcutta on 12.12.1991 - in the tune set by Late Jyotirindranath Tagore.

22] Every day just after the signature tune Doordarshan plays first stanza of 'Vande Mataram' along with the telecast visual images.

23] Notation of first two stanzas (in Raga Kafi) - by Pandit Ratanjankar in the revised version of the book of his compositions.

24] Instrumental: on Naval band - composed in Raga Kafi by Mr H.V.alias Bapurao Datey, Poona. [Both notation and recording is available.]

25] Sung by Pandit Vinayakrao Patwardhan for Mr H.V.Datey. [Private recording available]

26] Renowned dancer Kelucharan Mahapatra presented 'Vande Mataram' ballet in the Elephanta festival in Mumbai - Feb/March 1999. It is telecast from video on Indian TV channels occasionally.

27] Pandit Ram Narayan played it on sarangi in one of the music festivals organised in Mumbai in 1999.

28] Musician Hindukush and Cameraman C.K.S.Rao have released a video cassettee for the telecast on 15th August 2000. The entire song is included and is sung by Sadhana Sargam.

Anonymous said...

என் முந்தைய 'ஆரிய'பவன் கமெண்டை அழித்துவிடுங்கள். சிலருக்கு புண்ணியமாக உள்ளது வேறு சிலருக்கு புண்ணாக்காகவும் இருக்கலாம் என்ற பேருண்மையை புரியவைக்கத்தான். என்ன இருந்தாலும், மற்றவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவது தவறு தான். இதை அனைவரும் உணரவேண்டும். சக இந்து சகோதரர்களின் உணர்வுகளை காயப்படுத்தியிருந்தால் (நீங்கள் உட்பட) தயை கூர்ந்து மன்னியுங்கள்.

Anonymous said...

//
யோவ் வஜ்ரா
உங்கள் இந்து வேற(இந்து) எவனாவது பேசுறானான்னு பாரு. அத்தினி பேருக்கும் தெரிஞ்சிருக்கு. இங்கிட்டு நியாயம் இருக்குன்னு. புலம்பிச் சாவாத.
//

சரியான 100% உண்மை.

நாய்கள் சண்டையில் மனிதர்கள் என்றுமே தலையிட்மாட்டார்க்ள்...

(நாய் இனம் என்னை மன்னிக்கும் என்று நம்புகிறேன்)

Anonymous said...

//pulipaandi said...

என்னா? யாரயும் காணும். பொத்தியாச்சா?

அப்ப இவ்ளோ தானா? கட்சீல நா கேட்டதுக்கு பதிலு சொல்லாம எஸ்கேப்பா? இது என்ன முடிச்சவிக்கி வெவாதம். போங்கடா நீங்களும் ஒங்க பத்து நூத்தியம்பதுவாவும் வந்தே நாறுற மூத்திரமும். //

டேய் புலிபாண்டி உன் பேர்ல உள்ள ''இ"யை எடுக்க சொல்லி இந்த இமாம் பத்துவா போடுகிறேன்.

இமாம்
இஸ்லாமாபாத்.

Anonymous said...

சகோதரர் மணிகண்டன்

வாழ்த்துக்கள். வேறு கூற ஒன்றுமே இல்லை.

எப்பா தல சுத்துது. நேர்மையாக பின்னூட்டம் அதிகமாக பெறுவது எப்படி என்பதை உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

கிடைக்கும் வாய்ப்பை தவறவிடாது பல வழிமுறைகளை பயன்படுத்தி "வலையுலக தெண்டுல்கராக" வலம்வருபவர்களுக்கிடையில் நேர்மையாக சதம் அடித்துவிட்டு அடக்கமாக இருக்கும் சகோ. மணிகண்டனுக்கு பாராட்டுக்கள். இன்னும் கூறினால் பல பழையதும் பேச நேரும் வேண்டாம்.

116 x 1 + 116 = 232

116 x 2 + 116 = 348

116 x 3 + 116 = 464

16 x 4 + 116 = 580

ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம். ஆனாலும் இவ்வளவு வெகுளியா இருக்கக் கூடாதுங்க.

குசும்புடன்
இறை நேசன்

Vaa.Manikandan said...

மிக நல்லதொரு விவாததம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நண்பர்கள் பலரும் எச்சரித்தது போல ஒரு பின்னூட்டமும் ஆபாசமாகவோ அல்லது மட்டுறுத்த வேண்டிய அளவிலோ வரவில்லை என்பது மிகுந்த சந்தோஷம் அளிப்பதாக இருக்கிறது. புரிந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. சில நேரங்களில், சில பின்னூட்டங்களில் சிலர் ஆவேசப்பட்டாலும், தொடர்ந்து எழுதிய பின்னூட்டங்களில் ஆரோக்கியமான விவாதத்திற்கு அடித்தளமிட்டது உற்சாகமான அம்சம்.

நண்பர் இறைநேசன் குறிப்பிட்டது போல நான் பின்னூட்டமிட வேண்டிய அவசியமே வரவில்லை. இந்த கட்டுரையின் சாராம்சமே வற்புறுத்தல் அவசியம் இல்லை என்பதனை தெளிவுபடுத்தத்தான். மற்றபடி இந்து மதத்திற்கு எதிராகவோ அல்லது வந்தே மாதரம் பாடலை எதிர்த்தோ அல்ல. சுதந்திர தேசம் எனச் சொல்லிக் கொண்டு வற்புறுத்தத் தேவையில்லை என்பதனைக் குறிப்பிட விரும்பினேன். மற்றபடி இசுலாமியச் சகோதரர்கள் வந்தே மாதரம் பாடலை முற்றாகப் புறக்கணிப்பார்கள் என்று நம்பவில்லை. இது குறித்தான என் பார்வையை பிறிதொரு நாளில் விளக்கமாக எழுதுகிறேன்.

இது ஒரு முக்கியமான விவாதம் எனக் கருதப்படும் பட்சத்தில், அப்படிக் கருதுப் படக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றிகள்.

மற்றபடி விவாதத்தில் பங்கு பெற்றவர்களுக்கும், இன்னும் விவாதித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முன்னெடுத்துச் செல்ல இருப்பவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகள்.

அன்புடன்
வா.மணிகண்டன்

Anonymous said...

அதான் பெரியார் படத்துல குஷ்பு நடிக்கக் கூடாதுன்னு காடுவெட்டி இமாம் குடிதாங்கி பத்துவா போட்டுட்டருல்ல? இனிமே துலுக்கன் மட்டும்தான் பத்துவா போடுறான்னு பொறாமைப் பட வேண்டாம் ;D

வழக்கம் போல கேட்ட கேள்விக்குமட்டும் பதில் சொல்லாமல் பார்ப்பான் மேல் பழி போடும் கழிசடைகள் பெரியாருக்கு சந்தனம் போட்டது படையச்சியும் நாடாரும் என்று தெரிந்ததும் பொத்தவேண்டிய இடங்களை பொத்திக்கொண்டு மெளனம் சாதிப்பது ஒன்றும் புதிதில்லையே!