Nov 10, 2005

புதிய வலைப்பதிவாளர்களே!

சில ஐடியாக்கள்.உங்களுக்கு நிச்சயம் உதவக் கூடும்.

1)தனிப்பட்ட தாக்குதலை தொடர்ந்து நடத்துங்கள்.
2)"குஜால்" மேட்டராக தொடருங்கள்.
3)தெரிகிறதோ இல்லையோ எல்லா பதிவுகளிலும் பின்னூட்டமிடுங்கள்.
4)குஷ்பூ,தங்கர்,ரஜினி,ராமதாஸ் - பட்டாசான மேட்டர்.
5)கவிதை-நமுத்த மேட்டர்
6)பண்பாடு என்றாலே கிழித்தெறிய வேண்டும் எனக் கூவுங்கள்
7) சண்டைக்கென இருக்கும் சிலரை தொடர்ச்சியாக வம்பிழுங்கள்.
8)நினைவில் நிறுத்துங்கள்.நீங்கள் தான் இந்த சமுதாயத்தைத் திருப்பிப் போட வந்த முற்போக்குச் சிந்தனாவாதி.
9)முடிந்தால் இலங்கை குறித்து எழுதுங்கள்.இந்தியா...ம்ம்ம்ம்...'மூச்'
10)ஒவ்வொரு கமெண்டுக்கும் பதிலிடுங்கள்.100,200 ஐ த் தொடும் வரை. உதாரணத்திற்கு நிறைய பேர் உண்டு.
11)இலக்கியம் படித்ததில்லையா?கவலை வேண்டாம்.எழுதுங்கள்.அதுதான் தேவை.
12)பெண் பெயர் என்றால் மிக்க சந்தோஷம்.
13)ஜல்லியடித்தல் என ஒன்று உண்டு. மிக முக்கியமான விஷயம் அது. தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
14)பெயரில்லாமல் யாராவது திட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
15)கடைசியாக ஒன்று.கேள்வி மட்டும் கேட்டு விடாதீர்கள்.

10 எதிர் சப்தங்கள்:

பூனைக்குட்டி said...

ஜல்லியடித்தல் என்றால் என்ன? siRu kuRippu vraika.

Anonymous said...

கூகிளில் "ஜல்லியடித்தல்" எனத் தேடுக.

சிங். செயகுமார். said...

ஆமாங்க எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க

Ganesh Gopalasubramanian said...

//5)கவிதை-நமுத்த மேட்டர்
6)பண்பாடு என்றாலே கிழித்தெறிய வேண்டும் எனக் கூவுங்கள்//

Mani
Just do it என்று அன்னிக்கு நீ சொன்னது இப்போ ஞாபகம் வருது...

Ramya Nageswaran said...

மணிகண்டன், இந்தப் பதிவைப் பாருங்க: http://akkinikunchu.blogspot.com/2005/05/blog-post.html

Hard to beat this one!!

Maraboor J Chandrasekaran said...

romba sariyachonneenga!

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//கூகிளில் "ஜல்லியடித்தல்" எனத் தேடுக//

:) சொல் உபயம் சுஜாதா என நினைக்கிறேன்

பழூர் கார்த்தி said...

கலக்கி எடுத்திருக்கீங்க மணி, இதெல்லாம் அனுபவமா :-)

தாணு said...

மணிகண்டனுக்கு யார் மேல் இவ்வளவு கோபம்? பெண்கள் மீதா, பெண்களை வம்புக்கிழுப்பவர்கள் மேலா?

Vaa.Manikandan said...

நன்றி பின்னூட்டமிட்ட அனைவருக்கும். ஆனால் நிறைய அனானிமஸ் எதிர்பார்த்தேன். அவர்களை வம்பிழுக்கும் படியாக எனது அடுத்த பதிவின் பெயர் "அனனிமஸ் தறுதலைகளே"...வாங்க ஜமாய்க்கலாம்.