நீ வருவாய் என படத்தில் "பூங்குயில் பாட்டு பிடிசிருக்கா?" என்ற பாடலின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்கு பாடலாசிரியர் என அறிமுகம் ஆனவர் கவிஞர் விவேகா.
ஒரு மெல்லிய சோகத்தை இவரது பெரும்பாலான பாடல்கள் தாங்கி நிற்கின்றன.
"சொல்லத்தான் நினைக்கிறேன்,சொல்லாமல் தவிக்கிறேன்" என்னும் பாடலும் இந்த வகையினதே.இந்த பாடலில் "வாசப்படி ஓரமாய் வந்து வந்து போகும் காதல்" என பெண்மையை இதமாய் விளிக்கிறார்.
"மின்சாரம் என் மீது பாய்கின்றதே" என்னும் பாடல் வரிகளும் கவனிக்கத்தக்கவை.
இவரின் முதல் கவிதை நூலான "உயரங்களின் வேர்"(கற்பகம் புத்தகாலயம் வெளீயீடு) பல தரப்பட்ட தளங்களில் பயணிக்கிறது(முற்றிலும் புதுக்கவிதை என்னும் பிடிக்குள் இல்லை).
இந்தப்புத்தகத்தில் வரும் "தமிழ்த்தாய் வாழ்த்து" பேசப்படவேண்டிய நல்ல கவிதை.
அரசியல் குறித்த கவிதைகளும்,நிகழ்காலம் குறித்த கவிதைகளும் எள்ளல் மிகுந்து காணப்படுகின்றன.
இவரும் "டப்பாங்குத்து" எனப்படும் அதிரடிப்பாடல்களுக்கு முயன்று வருவது "ஜி" படத்தில் இடம் பெற்றிருக்கும் "வம்பை வெலைக்கு வாங்கும்" என்ற பாடலில் தெரிகிறது.இந்தப்பாடலில் ஓரிரு சொற்கள் மெட்டினை மீறி தொக்கி நிற்பது கொஞ்சம் நெருடலை தருகிறது. எனினும் நல்ல கற்பனை வளம் தெறிகிறது.
இதே சமயத்தில் வெளி வந்துள்ள ஆயுதம் படத்தில் வரும் "ஆலால விஷம்" நல்ல செறிவுடன் திகழ்கிறது.
திரைப்பாடலின் வெற்றி என்பது படத்தின் வெற்றியைப் பொறுத்தது என்பது இவரின் பல நல்ல பாடல்களுக்கு பொருந்த்தும்.
திரைப்பட பாடல் குறித்த நீண்ட விவாதம் தேவையில்லை என்னும் போதும் நல்ல கவிஞர்களை குறித்த நேரத்தில் இனம் காணுதல் அவசியம்.விவேகா அந்தப்புள்ளியில் நிற்கிறார்.
Aug 17, 2005
Subscribe to:
Post Comments (Atom)
2 எதிர் சப்தங்கள்:
கத்தணம் இல்லஅத்ஹ விளம்பரம்...
வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா...... நல்ல பாடல் //எனினும் நல்ல கற்பனை வளம் தெறிகிறது.// உண்மையான கருத்து...
//பூங்குயில் பாட்டு பிடிசிருக்கா?// புடிச்சிருக்கு... விவேகா ஒரு நல்ல பாடலாசிரியராக தொடர்வாரென நம்புகிறேன்.
Post a Comment