நிழல்-உயிர்மை கவிதை
நகர்ந்து கொண்டிருக்கிறது
மங்கலான அடர்த்தியான நிழல்
எனக்கு முன்பாகவும்,
நீளம் குறைந்து காலடியில்
பதுங்கியும்.
பின்புறமாகவும் நீள்கிறது.
நடுங்காமல்,நேர்த்தியாக.
நிழல் எந்தப்பக்கம் எனினும்,
சரளைக் கற்களினூடே புதையும் பாதங்களின்
ஒலிமட்டும் ஒரே திசையில்.
நன்றி:உயிர்மை-ஏப்ரல்'2005
2 எதிர் சப்தங்கள்:
இது ஒரு விசித்திரமாக இருக்கிறதே
நிகழ்வுகளை மட்டுமே குறிக்கிறதா அல்லது "உள்" நோக்கம் ஏதும் உள்ளதா?
உங்களின் தளம் (இந்தப் பதிவு) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...
Post a Comment