அது பிசாசு போலவே இல்லை!
அது
பிசாசு
போலவே இல்லை
மெழுகுவர்த்தியின்
வெளிச்சம்
என
உள் நுழைந்தது
காற்றில்
விரவிகிடக்கும்
பஞ்சுத்துகளின்
மென்மையில் தலை கோதித்-
தந்தது
மெல்லிய
விசும்பலுடன்
நிறைய பேசி,
என் மனைவியின்
மார்பில்
பார்வையை நிறுத்தியது.
இப்போது
தெரிந்தது
அதன்
பல்லில்-படிந்திருந்த
ஒரு துளி இரத்தம்.
3 எதிர் சப்தங்கள்:
நல்லாயிருக்கு.
தொடர்ந்து எழுதுங்கோ.
உங்கட விக்கிபீடியா முயற்சிக்கும் என்ர பாராட்டுக்கள்.
நன்றி வசந்தன்!
பொயெட் சும்மா இருங்கய்யா!
மிகவும் அட்டகாசமான கவிதை இது.
நல்ல நுணுக்கம்.
இதுவரை கவிதைகளில் பேசாதது என்பதாலோ என்னவோ
மிகவும் கவர்கிறது.
தலைப்பு அட்டகாசம்.
Post a Comment